K U M U D A M   N E W S

தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது- நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விஜய்-க்கு “Y" பிரிவு பாதுகாப்பு.. அச்சுறுத்தல் அதிகமாக இருந்திருக்கலாம்.. எ.வ.வேலு கருத்து

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-க்கு அச்சுறுத்தல் ஏதேனும் இருந்திருக்கலாம் என மத்திய அரசு கருதி இருக்கலாம். அதனால் அவருக்கு “Y" பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்.. இந்து முன்னணி பேரணிக்கு அனுமதி மறுப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

காவல் அதிகாரிகளின் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக் கூடாது- அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ரூ.5 லட்சம் இழப்பீடு.. பிரமாண பத்திரம் எழுதி வாங்கும் மாவட்ட நிர்வாகம்.. ராஜசேகரன் குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டில் விபத்து மற்றும் உயிரிழப்பு நேரிடும் பட்சத்தில் நபர் ஒருவருக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் விழா நடத்தும் கமிட்டியினரே செலுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எழுதி வாங்குவதால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

போத ஏறிப் போச்சு... பஸ்ச திருடியாச்சு... மாட்டிக்கிட்ட மெக்கானிக்!

சென்னையில் நள்ளிரவில் பணிமனையில் இருந்து மாநகர பேருந்தை திருடி இயக்கிச் சென்ற கார் மெக்கானிக்கை போலீஸார் கைது செய்துள்ளனர். நடத்துநர் மீதான ஆத்திரத்தில், பேருந்தை கடத்தியவர் சிக்கிக் கொண்டது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

பர்தா அணிந்து திருட்டு பெண் பட்டதாரியின் ஸ்கெட்ச் திருடியதற்கான காரணம் தான் ஹைலைட்!

சென்னையில் பர்தா அணிந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவரை தாக்கி நகையை பறித்துள்ள பெண் பட்டதாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிசிடிவியை ஆராய்ந்து பெண்ணை கைது செய்த போலீசிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் என்ன? திருட்டுக்கான பின்னணி என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

” *** உனக்கு கண்டக்டர் சீட் கேட்குதா!” முதியவரை தாக்கிய நடத்துனர் அரசு பஸ்ஸில் அநியாயம்

அரசு பேருந்தில் நடத்துனர் ஒருவர் முதியவரை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் என்று பாராமல் சட்டையை பிடித்து, இழுத்து தாக்கும் அளவிற்க்கு என்ன நடந்தது? ’92A’ பஸ்ஸில் நடந்தது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

கொலையில் முடிந்த தகராறு.. மனைவி தலையில் ஒரே போடு! உடலை காரில் வைத்து சுற்றுலா

தென்காசியில் பெண்ணை கொலை செய்து தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் கொலை வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தென்காசியை திணற வைத்துள்ள கொலை சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..