K U M U D A M   N E W S

தமிழ்நாடு

நடுங்க வைத்த பழவந்தாங்கல் ரயில் நிலைய சம்பவம்.. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் மர்ம நபர், பெண் காவலரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றிய சம்பவத்தின் எதிரொலியாக ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள்.. அண்ணாமலை கண்டனம்

கோவையில் 17 வயது சிறுமியை ஏழு மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார். 

ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணி.. தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள  கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான ஆறு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரி உள்ளது. 

மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக பட்ஜெட் மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி.. ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

வறுமையை ஒழிப்பதற்காகவும் தமிழகம் வருகிறார்கள் - எம்.எல்.ஏ எழிலன் பேச்சு..!

பீகார் மற்றும்  உ.பி.மாநிலத்தில் வசிக்க கூடிய பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த ஊரில்  சுயமரியாதை இல்லாததால் அவர்கள் தமிழகத்துக்கு  வந்து வசிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர்  எழிலன் தெரிவித்துள்ளார்.

லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்து - காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“வீட்டுல மரியாதையே இல்லை” மகளுக்கு கத்திக் குத்து மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்

வீட்டில் தன்னை யாருமே மதிக்காததால், மனைவியை கொலை செய்த கணவன், அதனை தடுக்கச் சென்ற மகளையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவால் ஒரு குடும்பமே சீரழிந்து நிற்கும் இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர் கைது..!

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ளார்.