K U M U D A M   N E W S

தமிழ்நாடு

அதிமுக முன்னாள் நகர செயலாளர் கொலை: 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

அதிமுக முன்னாள் நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரயில் பயணம் குறித்து மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் அறிவுரை!

எக்மோர் டாக்டர் அம்பேத்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில், எக்மோர் ரயில்வே பாதுகாப்பு படையால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ரயிலில் பயணம் செய்வது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், ரயிலில் பயணம் செய்யும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தோசையில் விஷம் கலந்து சாப்பிட்ட குடும்பம்.. கடன் தொல்லையால் விபரீதம்

சேலம் அருகே கடன் தொல்லையால் ஒரு குடும்பமே விஷம் கலந்த தோசையை சாப்பிட்டு, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ கட்டுமான பணியில் விபத்து.. வழக்கு பதிவு செய்த போலீசார்

ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், L&T நிறுவன பொறுப்பாளர் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செல்போன் வாங்கி தர மறுத்த பெற்றோர்.. 11 ஆம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு

செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து.. ஒருவர் உயிரிழந்த சோகம்

ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நகை திருடிய போலி டாக்டர்.. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரபரப்பு!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போலி டாக்டர் நோயாளியின் தங்க நகைகளை திருடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர் போலவே ஸ்டெதஸ் கோப் அணிந்து கொண்டு நோயாளிகளிடம் கைவரிசை காட்டியுள்ளார்.

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி - சென்னை திரும்பிய இண்டிகோ விமானம்..!

அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தை தொடர்ந்து, குஜராத் விமான நிலையம் மூடப்பட்டதால், சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னை திரும்பிய நிலையில், 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மணல் திருட்டு.. 18 கி.மீ சேஸிங்.. லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர்!

கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பின்தொடர்ந்து சென்று சோதனை சாவடியில் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

யார் சாமி நீ? கழுத்தில் பாம்பு.. கையில் பீர்.. அடாவடி செய்த நபர்

தர்மபுரியில் மதுக்கடைக்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.