K U M U D A M   N E W S

அரசியல்

234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவலாளி அஜித்குமார் மரணம்.. அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

பாமக எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்.. அன்புமணி அதிரடி முடிவு

பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

‘SORRY’ என்பது தான் உங்கள் பதிலா? எடப்பாடி பழனிசாமி காட்டம்

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திராவிடத்துக்கு எதிராக பேசும் பாஜக.. மௌனம் காக்கும் அதிமுக- அமைச்சர் சிவசங்கர்

அதிமுக, பாஜகவுக்கான மேடையை அமைத்துக் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க வை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய தேவை தி.மு.க-வுக்கு இல்லை - செந்தில் பாலாஜி

நாங்கள் யாரோடும் ? கூட்டணியில் சேர மாட்டோம் எனக் கூறிவிட்டு, தற்போது கூட்டணி அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள் பக்கத்தில் மிச்சர் வைத்து இருந்தால் சாப்பிட்டுக் கொண்டு இருந்து இருப்பார்கள் என அ.தி.மு.க வை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சியா? அண்ணாமலை கேள்வி

காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

காவலாளி அஜித் குமார் மரணம்: தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

சிவகங்கை அருகே கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னை அப்புறம் ஓட்டுங்க.. ஊழலை கவனிங்க: செல்லூர் ராஜு

“என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள், மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல்தான் முக்கியம், மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது” என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நிகழாமலிருக்க தக்க ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.