காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவனை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் ஊற்றிய விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் ஐந்து பேரை கைது செய்தனர்.
RR vs KKR: கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2-வது போட்டியிலும் தோல்வியை தழுவியது.
குழந்தை தொழிலாளர்களான சகோதரிகள் இருவர் தான் இந்த செயலில் ஈடுபட்டது என தெரியவந்துள்ளது.
இறைச்சி கழிவுகளால் தூர்நாற்றம் வீசி வருவதால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் வேறு விதமான நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மாலை 5 மணியளவில் உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலானது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மதுரை காஜிமார் தெருவில் உள்ள பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து சந்திப்பில் தம்பதியினர் ஒருவர் தங்களது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது குழந்தைக்கு வெயிலின் தாக்கம் இருந்துவிடக்கூடாது என்பதற்காக தாயார் கையில் கிடைத்த மூங்கில் கூடையை வைத்து தனது தலையில் வைத்தவாறு பயணித்தார்.
செப்பு பாத்திரங்கள் மெசபடோமியா காலத்திலிருந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் ஈட்டி அம்புகள் போன்ற பொருட்களின் கூர்மையான உலோகங்களை செய்வதற்கு பயன்பட்டுள்ளது. நாளடைவில் பெரும்பாலான மக்களும் செம்பு பாத்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
கல்லூரியில் படிக்கும் போது நான் ரொம்ப நல்ல பையன். நான் சிறுவனாக இருக்கும் போது வாடகை வீடு தான், நான் சாதிக்க வேண்டும் என கனவு கண்டேன், சாதித்து விட்டேன் என விக்ரம் தெரிவித்தார்.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் சூரியனின் தாக்கம் அதிகளவில் காணப்படும். ஆனால், கடந்த சில வருடங்களாக சூரியனின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் பொது இடங்களுக்கு செல்லும் போது உடல் சூட்டைத்தணிக்க நிறைய தண்ணீர், பழங்கள் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.
உயிரிழந்த காசி அம்மாள் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 29.3.2025 சனிக்கிழமை அன்று காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”நடைபெறும்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் முதல் பொதுக்குழுவை கூட்டுவதற்கு முன் தவெக நிர்வாகிகளுக்கு ஒரு புதிய அசைன்மெண்ட்டை அக்கட்சி தலைவர் விஜய் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர் கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் என்ன? தவெகவின் அடுத்தக்கட்ட மூவ் என்ன? என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்சௌலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி இருப்பது தான் தற்போதைய அரசியலில் ஹாட் டாப்பிக். ஒருவழியாக பாஜகவுடன் - அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் டீலிங்கே வேறு என்கிறது அரசியல் பட்சி. 40 நிமிட சந்திப்பில் அதிமுக வைத்த ஒற்றை டிமாண் கேட்டு பாஜக சொன்னது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
மழை நீர் வடிகால் கட்டுவது, சிறு பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில், அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று ( மார்.25 ) தரமணி உள்ளிட்ட 7 இடங்களில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் துப்பாக்கி வைத்து கொண்டு தான் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்கள் முதன் முறையாக விமான பயணம் மேற்கொண்னர். சென்னை விமான நிலையம் வந்த அவர்கள், விமானத்தில் வரும் பொழுது மேகக் கூட்டங்களை நேரடியாக பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.