இந்திய கர்நாடக இசையின் மாபெரும் அடையாளமாக விளங்கிய இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் பழம்பெரும் பாடகியின் கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்கும் ராஷ்மிகா :
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தை ‘கிங்டம்’ பட இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்குகிறார். நீண்ட நாட்களாக இந்த படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது படக்குழு அதனை உறுதி செய்துள்ளது.
இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா செப்டம்பர் 16, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த நாள் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பில் அனிருத் :
இந்த பிரம்மாண்டமான பயோபிக் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அவர் கவனிக்கிறார். படத்தின் தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இசை உலகின் மாபெரும் நட்சத்திரம் எம்.எஸ்.சுப்புலட்சுமி :
1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இவரது இயற்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் கொண்ட இவர், இசைக் குடும்பத்தில் பிறந்ததால் இயற்கையாகவே கலைச் சூழலில் வளர்ந்தார்.
இவரது தாயார் சண்முகவடிவு அம்மாள் புகழ்பெற்ற வீணை கலைஞராக இருந்தார். இவரது பாட்டியும் வயலின் இசையில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்.
சிறு வயதிலேயே தொடங்கிய இசைப் பயணம் :
எம்.எஸ்.சுப்புலட்சுமி தனது 11-வது வயதில் 1927-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோவிலில் தனது முதல் பொது இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
பின்னர் கர்நாடக இசையின் புகழ்பெற்ற பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் முறையான பயிற்சி பெற்றார். மேலும் இந்துஸ்தானி இசையையும் பண்டிட் நாராயண்ராவ் வியாஸ் அவர்களிடம் கற்றுக்கொண்டார்.
திரையுலகிலும் தடம் பதித்த இசை அரசி :
பாடகியாக மட்டுமின்றி நடிகையாகவும் எம்.எஸ்.சுப்புலட்சுமி ரசிகர்களை கவர்ந்தார். 1930 மற்றும் 1940-களில் சில திரைப்படங்களில் நடித்த அவர், ‘சேவாசதனம்’ மற்றும் ‘மீரா’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக ‘மீரா’ திரைப்படம் மூலம் அவரது புகழ் இந்தியா முழுவதும் பரவியது.
இசைக்காக அர்ப்பணித்த வாழ்க்கை :
கர்நாடக இசைக்கு உலகளவில் பெருமை சேர்த்த எம்.எஸ்.சுப்புலட்சுமி, பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
இசை உலகில் அழியாத தடம் பதித்த எம்.எஸ்.சுப்புலட்சுமி, 2004-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி தனது 88-வது வயதில் காலமானார்.
தற்போது அவரது வாழ்க்கையை மீண்டும் திரையில் கொண்டு வரும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்கும் ராஷ்மிகா :
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தை ‘கிங்டம்’ பட இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்குகிறார். நீண்ட நாட்களாக இந்த படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது படக்குழு அதனை உறுதி செய்துள்ளது.
இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா செப்டம்பர் 16, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த நாள் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பில் அனிருத் :
இந்த பிரம்மாண்டமான பயோபிக் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அவர் கவனிக்கிறார். படத்தின் தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
A LEGACY begins with an unforgettable celebration 🎶✨
— Geetha Arts (@GeethaArts) September 15, 2026
Witness the grand launch of #MS - A Legacy On Screen, celebrating Bharat Ratna #MSSubbulakshmi Amma's 110th Birth Anniversary with Ulaganayagan @ikamalhaasan garu as Chief Guest ❤️❤️
Starring @iamRashmika
Directed by… pic.twitter.com/1ebZtkDTrU
இசை உலகின் மாபெரும் நட்சத்திரம் எம்.எஸ்.சுப்புலட்சுமி :
1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இவரது இயற்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் கொண்ட இவர், இசைக் குடும்பத்தில் பிறந்ததால் இயற்கையாகவே கலைச் சூழலில் வளர்ந்தார்.
இவரது தாயார் சண்முகவடிவு அம்மாள் புகழ்பெற்ற வீணை கலைஞராக இருந்தார். இவரது பாட்டியும் வயலின் இசையில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்.
சிறு வயதிலேயே தொடங்கிய இசைப் பயணம் :
எம்.எஸ்.சுப்புலட்சுமி தனது 11-வது வயதில் 1927-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோவிலில் தனது முதல் பொது இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
பின்னர் கர்நாடக இசையின் புகழ்பெற்ற பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் முறையான பயிற்சி பெற்றார். மேலும் இந்துஸ்தானி இசையையும் பண்டிட் நாராயண்ராவ் வியாஸ் அவர்களிடம் கற்றுக்கொண்டார்.
திரையுலகிலும் தடம் பதித்த இசை அரசி :
பாடகியாக மட்டுமின்றி நடிகையாகவும் எம்.எஸ்.சுப்புலட்சுமி ரசிகர்களை கவர்ந்தார். 1930 மற்றும் 1940-களில் சில திரைப்படங்களில் நடித்த அவர், ‘சேவாசதனம்’ மற்றும் ‘மீரா’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக ‘மீரா’ திரைப்படம் மூலம் அவரது புகழ் இந்தியா முழுவதும் பரவியது.
இசைக்காக அர்ப்பணித்த வாழ்க்கை :
கர்நாடக இசைக்கு உலகளவில் பெருமை சேர்த்த எம்.எஸ்.சுப்புலட்சுமி, பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
இசை உலகில் அழியாத தடம் பதித்த எம்.எஸ்.சுப்புலட்சுமி, 2004-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி தனது 88-வது வயதில் காலமானார்.
தற்போது அவரது வாழ்க்கையை மீண்டும் திரையில் கொண்டு வரும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









