உலகம்

போப் பிரான்சிஸ் மறைவு: இறுதி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் 2 பேர் பங்கேற்பு!

ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் மறைவு: இறுதி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் 2 பேர் பங்கேற்பு!
போப் பிரான்சிஸ் மறைவு: இறுதி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் 2 பேர் பங்கேற்பு!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வயது 88 மூப்பு காரணமாக காலமானார் ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் திங்களன்று போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவை பூர்வீகமாக கொண்டவர்.

2013ம் ஆண்டு போப் பதவியில் இருந்து 26வது பெனடிக்ட் விலகியதை தொடர்ந்து பிரான்சிஸ் போப் ஆண்டவர் ஆனார். 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவராக போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். போப் பிரான்சிஸ் வயது மூப்பு மற்றும் சுவாச பிரச்சனை காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் உள்ளிட்டோர் போப் ஆண்டவரை சந்தித்து ஆசி பெற்று இருந்தார். ஈஸ்டர் நாளன்று வாடிகன் சதுக்கத்தில் கூடிய மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்து போப் பிரான்சிஸ் கையசைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 14 தேதி நிமோனியா தொற்று காரணமாக மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ்க்கு கடந்த சனிக்கிழமை ஆஸ்துமா பாதிப்பு தீவிரமடைந்தது. ஒரு மாத சிகிச்சைக்குப் பின் இல்லம் திரும்பிய போப் பிரான்சிஸ் ஓய்வெடுத்து வந்த நிலையில், தற்போது போப் பிரான்சிஸ் காலமானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாட்டு தலைவர்களும் போப் பிரான்சிஸ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவால் ஆழ்ந்த வருத்தம் கொள்கிறேன். ஏழைகள் மீதான போப்பின் அரவணைப்பு, அர்ப்பணிப்பு உலகத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மனித நேயத்தை இவ்வுலகிற்கு விட்டுச் சென்றுள்ளார் என்றும், ஒடுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதி, மதங்களைக் கடந்த உரையாடல்களால் கத்தோலிக்க மக்களுக்கு அப்பால் உலகம் முழுவதும் அவர் நினைவு கூரப்படுவார் என முதலமைச்சர் ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு சட்டசபையில், மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.