உலகம்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியா வருகை.. எல்லை வர்த்தகம்குறித்து பேச்சுவார்த்தை!

அரசு முறைப் பயணமாக 2 நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நாளை (ஆகஸ்ட் 18) இந்தியா வருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை அவர் டெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியா வருகை.. எல்லை வர்த்தகம்குறித்து பேச்சுவார்த்தை!
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியா வருகை!
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள்குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் எல்லை வழி வர்த்தகத்தைத் தொடங்குவது மற்றும் அமெரிக்காவின் வரிவிதிப்பு உள்ளிட்ட பொருளாதார விவகாரங்கள்குறித்து விரிவான ஆலோசனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாங் யி வருகை, எல்லை பிரச்சனை, எல்லை வழி வர்த்தகம், SCO உச்சி மாநாடிற்கான முன்னோட்ட பேச்சுவார்த்தை, மற்றும் AMERICA வரிவிதிப்பு போன்ற பொருளாதார, பாதுகாப்பு கவலைகள்குறித்து இந்தியா-சீனாவை முக்கிய அதிகாரிகள் இணைந்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு இரு நாடுகளும் இணைந்து ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்குமா என்ற எதிரிபார்ப்பு எழுந்துள்ளது. இந்தச் சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் இஇந்தப் பேச்சுவார்த்தை இந்தியா-சீனா உறவுகளில் புதிய திருப்புமுனையை உருவாக்கும் எனக் கணிக்கப்படுகிறது

சீன வெளியுறவு அமைச்சர் இந்திய வருகைக்குப் பின்னர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு (SCO Summit) ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 தேதிகளில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற உள்ளது. இதில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.