தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் உதவி ஆட்சியர், டிஎஸ்பி வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 / 1ஏ முதல்நிலைத்தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் 2.49 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
குரூப் 1 தேர்வு
சென்னையில் 170 மையங்களில் 41,094 பேர் தேர்வு எழுதுகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூர் பிரசிடென்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 200 தேர்வர்கள் முதல்நிலை தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் பேசியதாவது, “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 முதல் நிலை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அரசு பணியாளர் நடத்தும் தேர்வுகளில் மிக முக்கியமான தேர்வு குரூப் 1 தேர்வு. டிஎஸ்பி, டெப்டி கமிஷனர் போன்ற முக்கிய பணிகள் இந்த தேர்வு மூலம் செய்யப்படுகிறது.
12231 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்
தேர்வுகளை அட்டவணைப்படி திட்டமிட்டபடி நடத்தி வருகிறோம். சென்னையில் ஏறக்குறைய 170 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு மையத்தில் 200 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். 156 தேர்வர்கள் தேர்வெழுதுகின்றனர்.
குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதத்தில் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களில் முதன்மை தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு முடிவுகள் இரண்டு மாதத்திற்குள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு 10, 701 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு 10, 227 பேருக்கு ஜனவரி முதல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இன்னும் 12231 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.இந்த தேர்வில் எளிமை படுத்தப்பட்ட ஓ எம் ஆர் தாள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி மீது நம்பிக்கை
டிஎன்பிஎஸ்சி 95 ஆண்டுகால அனுபவம் உள்ள தேர்வாணையம். அதே மாதிரி அனுபவத்தின் அடிப்படையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. மொத்தமே 7 தேர்வுகள் தான் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் பல விண்ணப்பங்களை போட்டு குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
முன்பெல்லாம் 90 தேர்வுகள் நடைபெறும். இப்பொழுது அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தேர்வுகளில் முறைகேடுகள் அதிகளவில் நடைபெறுவது இல்லை. மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி மீது நம்பிக்கை உள்ளது.
குரூப் 4 காலிபணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு
ஒவ்வொரு தேர்வும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம்.தேர்வு தொடக்கத்தில் காலப் பணியிடங்களை உத்தேசமாக வைத்து தேர்வு நடத்தப்பட்டு விடும் காலிப்பணியிடம் அதிகரித்தாலும் தனியாக தேர்வு நடத்தப்படுவதில்லை இதிலிருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஒவ்வொரு syllabus பத்து யூனிட்டாக பிரிக்கிறோம்.தேர்வு ஒருவருக்காக நடத்தப்படுவது இல்லை.அதனால் தேர்வுக்கு நேரத்திற்கு வர வேண்டியது அவசியம்.முக்கியமான தேர்வாக இவர்கள் இதை நினைத்து எழுதும் பொழுது முதல் நாளை தேர்வு மையத்தை வந்து பார்த்துக்கொள்வது நல்லது.குரூப் 4 தேர்வுக்கு காலிப் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.
குரூப் 1 தேர்வு
சென்னையில் 170 மையங்களில் 41,094 பேர் தேர்வு எழுதுகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூர் பிரசிடென்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 200 தேர்வர்கள் முதல்நிலை தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் பேசியதாவது, “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 முதல் நிலை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அரசு பணியாளர் நடத்தும் தேர்வுகளில் மிக முக்கியமான தேர்வு குரூப் 1 தேர்வு. டிஎஸ்பி, டெப்டி கமிஷனர் போன்ற முக்கிய பணிகள் இந்த தேர்வு மூலம் செய்யப்படுகிறது.
12231 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்
தேர்வுகளை அட்டவணைப்படி திட்டமிட்டபடி நடத்தி வருகிறோம். சென்னையில் ஏறக்குறைய 170 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு மையத்தில் 200 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். 156 தேர்வர்கள் தேர்வெழுதுகின்றனர்.
குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதத்தில் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களில் முதன்மை தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு முடிவுகள் இரண்டு மாதத்திற்குள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு 10, 701 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு 10, 227 பேருக்கு ஜனவரி முதல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இன்னும் 12231 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.இந்த தேர்வில் எளிமை படுத்தப்பட்ட ஓ எம் ஆர் தாள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி மீது நம்பிக்கை
டிஎன்பிஎஸ்சி 95 ஆண்டுகால அனுபவம் உள்ள தேர்வாணையம். அதே மாதிரி அனுபவத்தின் அடிப்படையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. மொத்தமே 7 தேர்வுகள் தான் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் பல விண்ணப்பங்களை போட்டு குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
முன்பெல்லாம் 90 தேர்வுகள் நடைபெறும். இப்பொழுது அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தேர்வுகளில் முறைகேடுகள் அதிகளவில் நடைபெறுவது இல்லை. மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி மீது நம்பிக்கை உள்ளது.
குரூப் 4 காலிபணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு
ஒவ்வொரு தேர்வும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம்.தேர்வு தொடக்கத்தில் காலப் பணியிடங்களை உத்தேசமாக வைத்து தேர்வு நடத்தப்பட்டு விடும் காலிப்பணியிடம் அதிகரித்தாலும் தனியாக தேர்வு நடத்தப்படுவதில்லை இதிலிருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஒவ்வொரு syllabus பத்து யூனிட்டாக பிரிக்கிறோம்.தேர்வு ஒருவருக்காக நடத்தப்படுவது இல்லை.அதனால் தேர்வுக்கு நேரத்திற்கு வர வேண்டியது அவசியம்.முக்கியமான தேர்வாக இவர்கள் இதை நினைத்து எழுதும் பொழுது முதல் நாளை தேர்வு மையத்தை வந்து பார்த்துக்கொள்வது நல்லது.குரூப் 4 தேர்வுக்கு காலிப் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.