சென்னை மாநகரில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
திட்ட தொடக்கம் மற்றும் விரிவாக்கம்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்குப் புதிய நலத்திட்டங்களைத் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த உணவுத் திட்டம், வரும் டிசம்பர் 6-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை
பின்னர், இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களின் உழைப்பைப் பாராட்டினார். "நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், அதற்கு அடிப்படைத் தூய்மை தான். எந்தப் பேரிடரை எதிர்கொண்டாலும், அதில் இருந்து இந்த மாநிலம் மீண்டு வருவதில் உங்கள் பணி தான் இருக்கிறது. உங்களின் ஒப்பற்ற உழைப்பால்தான் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கிறது.
நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் செய்வது வேலை அல்ல, சேவை. ஊரே அடங்கிய பிறகு ஓய்வின்றி உழைப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள் தான். இந்த மாநகரமே உங்களின் சேவையைப் பார்த்து நன்றி உணர்வுடன் வணங்குகிறது. ஒட்டுமொத்த சென்னை சார்பாக உங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
அறிவிக்கப்பட்ட புதிய நலன்கள்
இந்த நிகழ்ச்சியில், சென்னையில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்காகச் சில புதிய நலத்திட்டங்களையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதில், சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தி.மு.க. அரசு படிப்படியாகச் செய்யும் என்று அவர் உறுதி அளித்தார்.
திட்ட தொடக்கம் மற்றும் விரிவாக்கம்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்குப் புதிய நலத்திட்டங்களைத் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த உணவுத் திட்டம், வரும் டிசம்பர் 6-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை
பின்னர், இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களின் உழைப்பைப் பாராட்டினார். "நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், அதற்கு அடிப்படைத் தூய்மை தான். எந்தப் பேரிடரை எதிர்கொண்டாலும், அதில் இருந்து இந்த மாநிலம் மீண்டு வருவதில் உங்கள் பணி தான் இருக்கிறது. உங்களின் ஒப்பற்ற உழைப்பால்தான் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கிறது.
நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் செய்வது வேலை அல்ல, சேவை. ஊரே அடங்கிய பிறகு ஓய்வின்றி உழைப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள் தான். இந்த மாநகரமே உங்களின் சேவையைப் பார்த்து நன்றி உணர்வுடன் வணங்குகிறது. ஒட்டுமொத்த சென்னை சார்பாக உங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
அறிவிக்கப்பட்ட புதிய நலன்கள்
இந்த நிகழ்ச்சியில், சென்னையில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்காகச் சில புதிய நலத்திட்டங்களையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதில், சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தி.மு.க. அரசு படிப்படியாகச் செய்யும் என்று அவர் உறுதி அளித்தார்.
LIVE 24 X 7









