திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையில் இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காகத் தந்தைக்கு விஷப்பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்த குற்றத்திற்காக, அவரது இரு மகன்கள் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை
பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளர் கணேசன் (56), கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தன் வீட்டு குளியலறையில் பாம்பு கடித்து உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கணேசன் இறந்த பிறகு, அவரது மகன்களான மோகன்ராஜ் மற்றும் அரிஹரன் ஆகியோர், தந்தையின் பெயரில் இருந்த இரண்டு காப்பீட்டு நிறுவனங்களில் இருந்த பணத்தைக் கோரி விண்ணப்பித்தனர். எனினும், கணேசனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட காப்பீட்டு நிறுவனம், இதில் சந்தேகம் ஏற்படவே, அது குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது. இதன் காரணமாக, திருவள்ளூர் எஸ்.பி. விவேகானந்தா சுக்லா உத்தரவின்படி, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கொலைக்கான சதித் திட்டம்
தனிப்படையினரின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. கணேசன் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் மொத்தம் ரூ.2.50 கோடிக்கு காப்பீடு செய்திருந்தார். குடும்பம் கடனில் தவித்த காரணத்தால், தந்தையைக் கொலை செய்து, அது இயற்கையான மரணம் என்று நம்ப வைத்து, காப்பீட்டுத் தொகையைப் பெற்று, கடன்களை அடைக்க மகன்கள் திட்டமிட்டது தெரிய வந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நல்ல பாம்பை வைத்துக் கடிக்க வைத்துத் தந்தையைக் கொல்ல முயன்றும் அவர் சாகவில்லை.
6 பேர் கைது
இதனையடுத்து, கடந்த அக்டோபர் 21ஆம் தேதி, தந்தை கணேசன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் கட்டுவிரியன் பாம்பை விட்டுக் கடிக்க வைத்து மகன்கள் அவரைக் கொலை செய்துள்ளனர். பின்னர், குளியலறையில் பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடி, அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்துள்ளனர். இந்தக் கொலைச் சம்பவத்திற்காக, அரக்கோணம் மணவூரைச் சேர்ந்த பாலாஜி (28), பிரசாந்த் (35), திருத்தணி தினகரன் (45), மற்றும் நவீன்குமார் (28) ஆகியோர் கட்டுவிரியன் பாம்பை வீட்டிற்குக் கொண்டு வர உதவியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, கணேசனின் இரு மகன்கள் உள்ளிட்ட மொத்தம் ஆறு பேரையும் போலீஸார் நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை
பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளர் கணேசன் (56), கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தன் வீட்டு குளியலறையில் பாம்பு கடித்து உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கணேசன் இறந்த பிறகு, அவரது மகன்களான மோகன்ராஜ் மற்றும் அரிஹரன் ஆகியோர், தந்தையின் பெயரில் இருந்த இரண்டு காப்பீட்டு நிறுவனங்களில் இருந்த பணத்தைக் கோரி விண்ணப்பித்தனர். எனினும், கணேசனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட காப்பீட்டு நிறுவனம், இதில் சந்தேகம் ஏற்படவே, அது குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது. இதன் காரணமாக, திருவள்ளூர் எஸ்.பி. விவேகானந்தா சுக்லா உத்தரவின்படி, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கொலைக்கான சதித் திட்டம்
தனிப்படையினரின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. கணேசன் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் மொத்தம் ரூ.2.50 கோடிக்கு காப்பீடு செய்திருந்தார். குடும்பம் கடனில் தவித்த காரணத்தால், தந்தையைக் கொலை செய்து, அது இயற்கையான மரணம் என்று நம்ப வைத்து, காப்பீட்டுத் தொகையைப் பெற்று, கடன்களை அடைக்க மகன்கள் திட்டமிட்டது தெரிய வந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நல்ல பாம்பை வைத்துக் கடிக்க வைத்துத் தந்தையைக் கொல்ல முயன்றும் அவர் சாகவில்லை.
6 பேர் கைது
இதனையடுத்து, கடந்த அக்டோபர் 21ஆம் தேதி, தந்தை கணேசன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் கட்டுவிரியன் பாம்பை விட்டுக் கடிக்க வைத்து மகன்கள் அவரைக் கொலை செய்துள்ளனர். பின்னர், குளியலறையில் பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடி, அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்துள்ளனர். இந்தக் கொலைச் சம்பவத்திற்காக, அரக்கோணம் மணவூரைச் சேர்ந்த பாலாஜி (28), பிரசாந்த் (35), திருத்தணி தினகரன் (45), மற்றும் நவீன்குமார் (28) ஆகியோர் கட்டுவிரியன் பாம்பை வீட்டிற்குக் கொண்டு வர உதவியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, கணேசனின் இரு மகன்கள் உள்ளிட்ட மொத்தம் ஆறு பேரையும் போலீஸார் நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
LIVE 24 X 7









