சென்னை தாம்பரம் அடுத்த சானிட்டோரியம் ஜட்ஜ் காலனி பகுதியில் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 128 மாணவிகள் தங்கி கல்லூரிகள், பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
பாலியல் பலாத்கார முயற்சி
இந்தநிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னால் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி சானிடோரியத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் தங்கி குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமி சேவை இல்லத்தில் அதிகாலையில் தூங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் சிறுமியின் முகத்தில் துணியை மூடி தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது மாணவி அவரிடம் இருந்து தப்பி ஓட முயச்சித்தபோது அந்த நபர் மாணவியை கொடூரமாக தாக்கி கீழே தள்ளிவிட்டு இரும்பு ராடால் காலில் தாக்கியபோது கால் முறிவு ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சிறுமி கூச்சலிட்டதால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
காவலாளி கைது
இதையடுத்து சேவை இல்லத்தில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிட்லபாக்கம் போலீசார் மகளிர் விடுதிக்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அரசு சேவை இல்லத்தில் சுற்றுச்சுவர் அதிக உயரம் கொண்டவை இதனால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாத நிலையில் முகப்பு பகுதியில் காவலாளி போடப்பட்டு இருப்பதால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்ல வாய்ப்பு இல்லாததால் போலீசார் அரசு சேவை இல்லத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த மேத்யூ (50) என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணை
விசாரணையில் காவலாளி தான் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காவலாளியை விசாரணை நடத்தினர்.விசாரணையில் சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மேத்யூ(50) என்பது தெரியவந்துள்ளது. மேலும் மேத்யூவின் தாயார் அதே அரசு சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்து உள்ளார்.அவர் இறந்த பிறகு கருணை அடிப்படையில் இவருக்கு அங்கு பணி வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது,
மேலும் கடந்த 14 வருடங்களாக அங்கு காவலாளியாக மேத்யூ பணிபுரிந்து வருவதும், பாதிப்புக்கு உள்ளான மாணவி ஐந்து நாட்களுக்கு முன்னால் தான் அரசு சேவை இல்லத்தில் சேர்ந்ததால் இவர் வெளியில் எதையும் சொல்ல மாட்டார் என்று எண்ணி அவரிடம் பாலியல் தொந்தரவில் காவலாளி ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவிக்கு கவுன்சிலிங்
இதையடுத்து மேத்யூ மீது சிட்லபாக்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கால் முறிவுடன் சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு உளவியல் ரீதியிலான கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர். முன்னதாக மாணவிக்கு பல்வேறு கட்ட மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதலில் கால் எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை நேற்று நடந்தது. மருத்துவ குழுவினர் எலும்பு முறிவு சிகிச்சையை மேற்கொண்டு தற்போது அவர் நலமாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மனநல மருத்துவர்கள் மாணவிக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் வழங்கி உள்ளனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் காணப்பட்ட மாணவி அதில் இருந்து மீண்டு வருவதற்கான ஆலோசனைகளை வழங்கினர். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். அவர் சிகிச்சை பெறும் வார்டில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மாணவிக்கு தேவையான சிகிச்சை அனைத்து துறைகள் மூலம் வழங்கப் பட்டு கண்காணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பாலியல் பலாத்கார முயற்சி
இந்தநிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னால் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி சானிடோரியத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் தங்கி குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமி சேவை இல்லத்தில் அதிகாலையில் தூங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் சிறுமியின் முகத்தில் துணியை மூடி தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது மாணவி அவரிடம் இருந்து தப்பி ஓட முயச்சித்தபோது அந்த நபர் மாணவியை கொடூரமாக தாக்கி கீழே தள்ளிவிட்டு இரும்பு ராடால் காலில் தாக்கியபோது கால் முறிவு ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சிறுமி கூச்சலிட்டதால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
காவலாளி கைது
இதையடுத்து சேவை இல்லத்தில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிட்லபாக்கம் போலீசார் மகளிர் விடுதிக்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அரசு சேவை இல்லத்தில் சுற்றுச்சுவர் அதிக உயரம் கொண்டவை இதனால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாத நிலையில் முகப்பு பகுதியில் காவலாளி போடப்பட்டு இருப்பதால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்ல வாய்ப்பு இல்லாததால் போலீசார் அரசு சேவை இல்லத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த மேத்யூ (50) என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணை
விசாரணையில் காவலாளி தான் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காவலாளியை விசாரணை நடத்தினர்.விசாரணையில் சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மேத்யூ(50) என்பது தெரியவந்துள்ளது. மேலும் மேத்யூவின் தாயார் அதே அரசு சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்து உள்ளார்.அவர் இறந்த பிறகு கருணை அடிப்படையில் இவருக்கு அங்கு பணி வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது,
மேலும் கடந்த 14 வருடங்களாக அங்கு காவலாளியாக மேத்யூ பணிபுரிந்து வருவதும், பாதிப்புக்கு உள்ளான மாணவி ஐந்து நாட்களுக்கு முன்னால் தான் அரசு சேவை இல்லத்தில் சேர்ந்ததால் இவர் வெளியில் எதையும் சொல்ல மாட்டார் என்று எண்ணி அவரிடம் பாலியல் தொந்தரவில் காவலாளி ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவிக்கு கவுன்சிலிங்
இதையடுத்து மேத்யூ மீது சிட்லபாக்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கால் முறிவுடன் சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு உளவியல் ரீதியிலான கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர். முன்னதாக மாணவிக்கு பல்வேறு கட்ட மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதலில் கால் எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை நேற்று நடந்தது. மருத்துவ குழுவினர் எலும்பு முறிவு சிகிச்சையை மேற்கொண்டு தற்போது அவர் நலமாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மனநல மருத்துவர்கள் மாணவிக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் வழங்கி உள்ளனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் காணப்பட்ட மாணவி அதில் இருந்து மீண்டு வருவதற்கான ஆலோசனைகளை வழங்கினர். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். அவர் சிகிச்சை பெறும் வார்டில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மாணவிக்கு தேவையான சிகிச்சை அனைத்து துறைகள் மூலம் வழங்கப் பட்டு கண்காணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.