கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே கடந்த வாரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது சீனியர் மருத்துவர் ஒருவரை கண்டித்த விவகாரம் மருத்துவர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அமைச்சர் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோரிய நிலையில், அதனை நிராகரித்துள்ளார் மருத்துவர். தான் அவமானப்படுத்தப்பட்ட அதே மருத்துவமனையில் நேரில் மன்னிப்பு கேட்குமாறு மருத்துவர் கூறியுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
என்ன பிரச்சனை?
கோவா மாநிலத்தை சார்ந்த பத்திரிகையாளர், தனது மாமியாருக்கு வைட்டமின் பி12 ஊசி போடுமாறு கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையினை (GMCH) அணுகியுள்ளார். அப்போது மருத்துவர்கள், அந்த பெண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஊசி போட்டுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பத்திரிக்கையாளர் கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று இதுக்குறித்து விசாரிக்க கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வருகை தந்த, சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே, பணியிலிருந்த விபத்து மற்றும் அவசரகால மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரை கடுமையாக அனைவரின் முன்னிலையில் பேசினார். அதனைத் தொடர்ந்து அவரை இடைநீக்கமும் செய்து உத்தரவிட்டார். இதனால், அரசு மருத்துவமனையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
வைட்டமின் பி12 ஊசி போட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியது எதற்காக என மருத்துவர் ருத்ரேஷ் குட்டிகர் விளக்கமளித்தார். தனது விளக்கத்தில், “ மாநிலத்தின் தலைமை மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரகாலப் பிரிவு நெறிமுறைகளை மட்டுமே நான் பின்பற்றினேன். வைட்டமின் பி12 ஊசி போடுவதற்கு வெளி நோயாளிகள் பிரிவு அல்லது அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அந்த நோயாளி சென்றிருக்க வேண்டும். அவர் மாநிலத்தின் தலைமை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்திருக்கக்கூடாது.
வைட்டமின் பி12 ஊசி என்பது அவசர ஊசி அல்ல. எனவே அவர்கள் OPD-கள் அல்லது அருகிலுள்ள PHC-களுக்கு தான் சென்றிருக்க வேண்டும். தலைமை மருத்துவமனையில் கடுமையான, ஆபத்தான நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இப்போதெல்லாம், சிறிய வழக்குகளும் GMC அவசர சிகிச்சை பிரிவுக்கு வருகின்றன. கடுமையான வழக்குகள் மட்டுமே இங்கு பார்க்கப்பட வேண்டும் என்பது நெறிமுறை. வழக்கமான ஊசி ஒருபோதும் அவசரம் இல்லை” என கூறினார்.
ஆனால், அவரது விளக்கத்தில் திருப்தியடையாத கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர், டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டது. இவை இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்த சம்பவம் அரசு மருத்துவர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியது. போராட்டத்தில் ஈடுபட மருத்துவர்கள் சங்கம் முடிவெடுத்த நிலையில், இடைநீக்க உத்தரவினை அடுத்த நாளே முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ரத்து செய்து உத்தரவிட்டார். இதோடு பிரச்சனை முடிவுக்கு வரும் என கருதப்பட்ட நிலையில், சீனியர் மருத்துவரை தரக்குறைவாக பேசிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மருத்துவர்கள் தரப்பு கோரிக்கை விடுத்தது.
நேரில் மன்னிப்பு கேட்க கோரிக்கை:
பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோவா சுகாதாரத்துறை அமைச்சர் தனது சமூக ஊடகப்பக்கத்திலும், தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றிலும் மன்னிப்பு கேட்டார். ஆனால், இதை ஏற்க மருத்துவர் தரப்பு மறுத்துவிட்டது.
டாக்டர் ருத்ரேஷ் குட்டிகர் அமைச்சரின் மன்னிப்பு குறித்து கூறுகையில், "நான் வீடியோவைப் பார்த்தேன். இது ஒரு ஸ்டுடியோ மன்னிப்பு. சம்பவம் நடந்த போது சுற்றியிருந்த நோயாளிகளின் முன்னிலையில், நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். அமைச்சரும் சம்பவம் நடந்த அதே இடத்தில், நோயாளிகளின் முன்னிலையில் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோருகிறோம். நான் அவமானப்படுத்தப்பட்டது வைரலாகிவிட்டது. எனவே நீங்கள் மன்னிப்பு கேட்பது பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும்.. அதுவும் 24 மணி நேரத்திற்குள்," என்று கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (GMCH) விபத்து மற்றும் அவசரகால மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் ருத்ரேஷ் குட்டிகர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே, “நான் நிலைமையை கையாண்ட விதம் குறித்து மிகவும் வருந்துகிறேன். GMC-க்கு நான் சென்றபோது நான் பேசிய கடுமையான வார்த்தைகளுக்காக, டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரிடம் எனது மனமார்ந்த மன்னிப்பை வெளிப்படையாக தெரிவித்துக் கொள்கிறேன், என நான் ஏற்கெனவே தேசிய ஊடகம் வாயிலாக மன்னிப்புக் கேட்டுள்ளேன். இதற்கு மேல் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள்? எனது மன்னிப்பை மருத்துவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவது முக்கியம். நாம் இருவரும் ஒரு கப் தேநீர் அருந்தி இப்பிரச்சனையினை சுமூகமாக தீர்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மருத்துவமனையில் அனைவரின் முன்னிலையில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ள நிலையில் கோவாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
என்ன பிரச்சனை?
கோவா மாநிலத்தை சார்ந்த பத்திரிகையாளர், தனது மாமியாருக்கு வைட்டமின் பி12 ஊசி போடுமாறு கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையினை (GMCH) அணுகியுள்ளார். அப்போது மருத்துவர்கள், அந்த பெண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஊசி போட்டுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பத்திரிக்கையாளர் கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று இதுக்குறித்து விசாரிக்க கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வருகை தந்த, சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே, பணியிலிருந்த விபத்து மற்றும் அவசரகால மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரை கடுமையாக அனைவரின் முன்னிலையில் பேசினார். அதனைத் தொடர்ந்து அவரை இடைநீக்கமும் செய்து உத்தரவிட்டார். இதனால், அரசு மருத்துவமனையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
வைட்டமின் பி12 ஊசி போட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியது எதற்காக என மருத்துவர் ருத்ரேஷ் குட்டிகர் விளக்கமளித்தார். தனது விளக்கத்தில், “ மாநிலத்தின் தலைமை மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரகாலப் பிரிவு நெறிமுறைகளை மட்டுமே நான் பின்பற்றினேன். வைட்டமின் பி12 ஊசி போடுவதற்கு வெளி நோயாளிகள் பிரிவு அல்லது அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அந்த நோயாளி சென்றிருக்க வேண்டும். அவர் மாநிலத்தின் தலைமை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்திருக்கக்கூடாது.
வைட்டமின் பி12 ஊசி என்பது அவசர ஊசி அல்ல. எனவே அவர்கள் OPD-கள் அல்லது அருகிலுள்ள PHC-களுக்கு தான் சென்றிருக்க வேண்டும். தலைமை மருத்துவமனையில் கடுமையான, ஆபத்தான நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இப்போதெல்லாம், சிறிய வழக்குகளும் GMC அவசர சிகிச்சை பிரிவுக்கு வருகின்றன. கடுமையான வழக்குகள் மட்டுமே இங்கு பார்க்கப்பட வேண்டும் என்பது நெறிமுறை. வழக்கமான ஊசி ஒருபோதும் அவசரம் இல்லை” என கூறினார்.
ஆனால், அவரது விளக்கத்தில் திருப்தியடையாத கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர், டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டது. இவை இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்த சம்பவம் அரசு மருத்துவர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியது. போராட்டத்தில் ஈடுபட மருத்துவர்கள் சங்கம் முடிவெடுத்த நிலையில், இடைநீக்க உத்தரவினை அடுத்த நாளே முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ரத்து செய்து உத்தரவிட்டார். இதோடு பிரச்சனை முடிவுக்கு வரும் என கருதப்பட்ட நிலையில், சீனியர் மருத்துவரை தரக்குறைவாக பேசிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மருத்துவர்கள் தரப்பு கோரிக்கை விடுத்தது.
நேரில் மன்னிப்பு கேட்க கோரிக்கை:
பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோவா சுகாதாரத்துறை அமைச்சர் தனது சமூக ஊடகப்பக்கத்திலும், தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றிலும் மன்னிப்பு கேட்டார். ஆனால், இதை ஏற்க மருத்துவர் தரப்பு மறுத்துவிட்டது.
டாக்டர் ருத்ரேஷ் குட்டிகர் அமைச்சரின் மன்னிப்பு குறித்து கூறுகையில், "நான் வீடியோவைப் பார்த்தேன். இது ஒரு ஸ்டுடியோ மன்னிப்பு. சம்பவம் நடந்த போது சுற்றியிருந்த நோயாளிகளின் முன்னிலையில், நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். அமைச்சரும் சம்பவம் நடந்த அதே இடத்தில், நோயாளிகளின் முன்னிலையில் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோருகிறோம். நான் அவமானப்படுத்தப்பட்டது வைரலாகிவிட்டது. எனவே நீங்கள் மன்னிப்பு கேட்பது பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும்.. அதுவும் 24 மணி நேரத்திற்குள்," என்று கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (GMCH) விபத்து மற்றும் அவசரகால மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் ருத்ரேஷ் குட்டிகர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே, “நான் நிலைமையை கையாண்ட விதம் குறித்து மிகவும் வருந்துகிறேன். GMC-க்கு நான் சென்றபோது நான் பேசிய கடுமையான வார்த்தைகளுக்காக, டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரிடம் எனது மனமார்ந்த மன்னிப்பை வெளிப்படையாக தெரிவித்துக் கொள்கிறேன், என நான் ஏற்கெனவே தேசிய ஊடகம் வாயிலாக மன்னிப்புக் கேட்டுள்ளேன். இதற்கு மேல் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள்? எனது மன்னிப்பை மருத்துவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவது முக்கியம். நாம் இருவரும் ஒரு கப் தேநீர் அருந்தி இப்பிரச்சனையினை சுமூகமாக தீர்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மருத்துவமனையில் அனைவரின் முன்னிலையில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ள நிலையில் கோவாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.