வதந்திகளை நம்ப வேண்டாம்
இந்த நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளது. அனைத்து எரிபொருள் நிலையங்களும் வழக்கம்போல் செயல்படும் என்றும், விநியோக நடவடிக்கைகள் எவ்விதத் தடையுமின்றிச் சீராக நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
நிதானம் காக்க வேண்டுகோள்
பொதுமக்கள் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றும், பெட்ரோல் பங்குகளில் தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்குமாறும் இந்தியன் ஆயில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. எரிபொருள் இருப்பு தாராளமாக உள்ளதால், மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
We are with you at every step, ensuring uninterrupted access to fuel across the country. IndianOil Fuel Stations nationwide remain fully operational, with adequate supplies of petrol and diesel being distributed smoothly across the network. Customers are requested to rely on… pic.twitter.com/8qOj5Y9QoG
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) March 12, 2026
LIVE 24 X 7









