தமிழ்நாடு

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. நாளை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. நாளை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
School, colleges leave
சென்னை கடற்கரையை நெருங்கியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை எச்சரிக்கை மற்றும் காரணம்

வலுவிழந்த 'டிட்வா' புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகச் சென்னை கடற்கரையை நெருங்கியுள்ளது. இது இன்று காலை (டிசம்பர் 1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழையைப் பொழிந்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் (Red Alert), செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் (Yellow Alert) விடுத்திருக்கிறது.

மேலும், புயல் சின்னம் அடுத்த 2 நாட்களுக்குச் சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிசம்பர் 3-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 11 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 18 செ.மீ., மணலியில் 15 செ.மீ., பாரிமுனையில் 14 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

நாளை விடுமுறை அறிவிப்பு

நாளை (டிசம்பர் 2) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.