தமிழ்நாடு

ரூ.25-க்கு உணவு டெலிவரி.. ரேபிடோவின் அதிரடி திட்டம்!

பைக் டாக்ஸி மூலம் பிரபலமான ரேபிடோ நிறுவனம் உணவு டெலிவரி சேவையிலும் தன் கால் தடத்தை பதிக்கவுள்ளது. இம்மாத இறுதியில் பெங்களூருவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.25-க்கு உணவு டெலிவரி.. ரேபிடோவின் அதிரடி திட்டம்!
ரூ.25-க்கு உணவு டெலிவரி.. ரேபிடோவின் அதிரடி திட்டம்!
ரேபிடோ நிறுவனம் உணவு டெலிவரி சேவையை OWNLY செயலியின் மூலம் பெங்களூருவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதற்கு கமிஷன் இல்லாமல் ரூ.25-க்கு குறைந்த கட்டணத்தில் இந்த சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமில்லாமல், இந்தியா முழுவதும் உணவு டெலிவரி சேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு டெலிவரிக்கு என்று பிரேத்யகமாக பல ஆன்லைன் நிறுவனங்கள் உள்ளன. இந்த வரிசையில் பைக் டாக்ஸி சேவையின் முன்னோடியாக அறியப்படும் ரேபிடோ (Rapido) நிறுவனம், உணவு டெலிவரி சந்தையில் புதிதாக களமிறங்க உள்ளது. இது, வேகமான போக்குவரத்து சேவையில் நிலைத்துவந்த ரேபிடோவின் வாடிக்கையாளர், அதே நம்பிக்கையுடன் ரேபிடோவின் உணவுப் பிரிவில் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.100க்கும் குறைவான ஆர்டர்களுக்கு டெலிவரி கட்டணமாக ரூ.20ம், ரூ.100க்கும் அதிகமான ஆர்டர்களுக்கு ரூ.25ம் வசூலிக்க முடிவு. இந்த சேவையில் வாடிக்கையாளர்களுக்கு வசதியான கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது சந்தையில் உள்ள மற்ற டெலிவரி சேவைகளை விட மிகக் குறைவாக உள்ளது. இம்மாத இறுதிக்குள் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் பெங்களூருவில் இந்த சேவை தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும வகையில் குறைந்த கட்டணம் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் இந்த சேவை செயல்படுத்தப்படும் என ரேபிடோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களிடம் நேர்த்தியான மற்றும் குறைந்த செலவிலான சேவையை வழங்குவதில் கவனம் செலுத்தும் ரேபிடோ, முதற்கட்டமாக பெங்களூருவில் சேவையை ஆரம்பித்து, பின்னர் இதை பிற முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. உணவு டெலிவரி உலகில் விலை குறைப்பு மற்றும் சேவை நேர்த்தி என்ற இரட்டை ஆயுதங்களுடன் சந்தையை கவர ரேபிடோ தயாராகி வருகிறது.