தமிழ்நாடு

மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் கல்வி விருது விழா..!

10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தவெக சார்பில் வரும் 30ம் தேதி கல்வி விருது விழா நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் கல்வி விருது விழா..!
மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் கல்வி விருது விழா..!
தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பாராட்டு விழா நடத்தி சான்றிதழும், பரிசும் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர் சட்டமன்ற தொகுதி வாரியாக மாணவர்களை அழைத்து தவெக தலைவர் விஜய் நேரில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவிப்பார்.
அதே போல் இந்த வருடமும் வரும் 30 ஆம் தேதி கல்வி விருது விழா நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி விருது விழா 3 கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும், முதற்கட்டமாக 20 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரியலூர், ஜெயங்கொண்டம், அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை, கடலூர்,
குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, புவனகிரி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் தொகுதி மாணவ, மாணவிகளும் முதல் நாள் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாமல்லபுரத்தில் உள்ல தனியார் விடுதியில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியரை அழைத்து கல்வி விருது விழாவில் பாராட்டி வருகிறார். குறிப்பாக, அதில் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி அனைவரையும் பாராட்டி வருகிறார். அதேபோல இந்த ஆண்டில் தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியரை நேரில் அழைத்து பாராட்ட உள்ளார்.

தவெக சார்பில் நடைபெறும் பாராட்டு விழாக்கள் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உற்சாகத்தையும், கல்வியில் மேலும் சிறண்டு விளங்க ஊக்கத்தையும் வழங்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.