திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்த நிலையில், அவரது உடல் தவறுதலாக பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் தொடர்புடைய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பூச்சி மருந்தை குடித்த விவசாயி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூஜ்ஜிரெட்டி பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன். இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியின் காரணமாக பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வயிற்று வலி சரியாகததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக ராஜேந்திரன் மீண்டும் கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வலியை தாங்க முடியாமல் இருந்த ராஜேந்திரன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிணவறையில் மாறிய உடல்:
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் ராஜேந்திரன் உயிரிழந்தார். இதனையடுத்து ராஜேந்திரன் உறவினர்கள் சடலத்தை பெற்றுக்கொள்ள மருத்துவமனையின் பிணவறைக்கு வெளியே காத்திருந்தனர். அப்போது மருத்துவமனை பணியாளர்கள் 60 வயது முதிர்ந்த ராஜேந்திரனின் உடலுக்கு பதிலாக இளம் வயதில் இருக்கும் உடலை காட்டி எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்தது.
நேற்றைய தினம் பிணவறையினை முற்றுகையிட்டு ராஜேந்திரனின் உடல் எங்கே? என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் பிணவறையில் இருந்து யார்.. யார்..? எந்த சடலம், எங்கே அனுப்பப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடைப்பெற்றதோடு, பிணவறையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் மருத்துவக்குழு ஆய்வு செய்தனர்.
விசாரணையில் ராஜேந்திரன் உடல் பீகார் மாநிலத்திற்கு அனுப்பியது தெரிய வந்தது. இதனையடுத்து பீகார் மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட ராஜேந்திரன் உடல் போலீசார் உதவியுடன் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உறவினர்கள் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையின் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பூச்சி மருந்தை குடித்த விவசாயி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூஜ்ஜிரெட்டி பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன். இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியின் காரணமாக பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வயிற்று வலி சரியாகததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக ராஜேந்திரன் மீண்டும் கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வலியை தாங்க முடியாமல் இருந்த ராஜேந்திரன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிணவறையில் மாறிய உடல்:
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் ராஜேந்திரன் உயிரிழந்தார். இதனையடுத்து ராஜேந்திரன் உறவினர்கள் சடலத்தை பெற்றுக்கொள்ள மருத்துவமனையின் பிணவறைக்கு வெளியே காத்திருந்தனர். அப்போது மருத்துவமனை பணியாளர்கள் 60 வயது முதிர்ந்த ராஜேந்திரனின் உடலுக்கு பதிலாக இளம் வயதில் இருக்கும் உடலை காட்டி எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்தது.
நேற்றைய தினம் பிணவறையினை முற்றுகையிட்டு ராஜேந்திரனின் உடல் எங்கே? என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் பிணவறையில் இருந்து யார்.. யார்..? எந்த சடலம், எங்கே அனுப்பப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடைப்பெற்றதோடு, பிணவறையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் மருத்துவக்குழு ஆய்வு செய்தனர்.
விசாரணையில் ராஜேந்திரன் உடல் பீகார் மாநிலத்திற்கு அனுப்பியது தெரிய வந்தது. இதனையடுத்து பீகார் மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட ராஜேந்திரன் உடல் போலீசார் உதவியுடன் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உறவினர்கள் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையின் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.