அரசியல்

திலகபாமா நீக்கமா? நீடிப்பாரா? யார் தான் பாமக பொருளாளர்? குழப்பத்தில் தொண்டர்கள்!

பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்பட்டதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். நிறுவனரும், தலைவரும் மாறி, மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், பாமகவின் தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திலகபாமா நீக்கமா? நீடிப்பாரா? யார் தான் பாமக பொருளாளர்? குழப்பத்தில் தொண்டர்கள்!
திலகபாமா நீக்கமா? நீடிப்பாரா? யார் தான் பாமக பொருளாளர்? குழப்பத்தில் தொண்டர்கள்!
பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவராக கடந்த டிசம்பர் மாதம் பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தனது பேரன் முகுந்தனை பாகம நிறுவனர் ராமதாஸ் இளைஞரணி தலைவராக நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இருவருக்குமிடையே மேடையிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

‘கட்சியில் இருக்க விருப்பம் இல்லாதவர்கள் கிளம்பலாம்; இது நான் தொடங்கிய கட்சி’ என ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்தார். தொடர்ந்து, பனையூரில் தனியாக கட்சி அலுவலகம் தொடங்கியிருப்பதாகவும், தன்னை சந்திப்பவர்கள் அங்கு வரலாம் எனவும் கூறி மேடையிலிருந்து அன்புமணி திடீரென அங்கிருந்து சென்றார். குடும்ப பிரச்னையாக ஆரம்பித்து, கட்சி பிரச்னையாக தொடரும் இவர்களின் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது.

இந்த பிரச்சினை தற்போது வரை நீடித்து வரும் நிலையில், நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது கட்சி தொண்டர்கள் மட்டுமில்லாது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், பாமக இளைஞரணி தலைவர் பதவியில் முகுந்தன் நீடிப்பார் என ராமதாஸ் அறிவித்த சில மணி நேரத்திலேயே, முகுந்தன் விலகுவதாக அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, இன்று சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகளை 3 நாட்களுக்கு அன்புமணி பாமக நிர்வாகிகளை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. தொடர்ந்து, குறிப்பாக கட்சியின் பொருளாளர் திலகபாமா பங்கேற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் திலகபாமா பா.ம.க. பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திலகபாமாவுக்கு பதிலாக திருப்பூர் சையத் மன்சூர் பா.ம.க. பொருளாளராக நியமிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவில் அடிமட்ட தொண்டனாக தொடர்ந்து செயல்படுவேன். தொடர்ந்து, கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும், இன்றிலிருந்து சுதந்திரமாக செயல்பட முடியும் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

விரைவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும். உங்களின் அனைத்து கேள்விகளுக்கு விரைவில் பதிலளிப்பேன். பாமகவின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்க்கொள்வதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல், ராமதாஸால் நீக்கப்பட்ட திலகபாமாவை மீண்டும் கட்சியின் பொருளாளராக அன்புமணி நியமித்தார். மேலும், கட்சியின் நிர்வாகிகளை மாற்ற தலைவரான தனக்கே அதிகாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, பா.ம.க.வில் பொருளாளராக திலகபாமாவே நீடிப்பார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கட்சியின் நிறுவனரும், தலைவரும் மாறி, மாறி அறிவிப்புகளை வெளியிட்டு கட்சி தொண்டர்களை பதற்றத்திலேயே வைத்துள்ளனர். தொடர்ந்து, பாமகவின் பொருளாளர் யார் என்ற கேள்வியும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. திலகபாமா பொருளாளர் பதவியில் இருந்து மட்டும் நீக்கமா, இல்லை கட்சியில் இருந்தே நீக்கப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதால் விரைவில் இதற்கான பதில் கிடைக்கும் என்று பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் காத்திருக்கின்றனர்.