கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அண்ணாமலையின் கண்டனப் பதிவு
கோவை விமான நிலையம் அருகில் நடந்த கொடூரச் சம்பவம் குறித்து அண்ணாமலை தனது பதிவில் கூறியிருப்பதாவது:
"கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
தி.மு.க. ஆட்சியின் மீதான குற்றச்சாட்டுகள்
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்குச் சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கு எதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன.
தி.மு.க. அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கவோ, தி.மு.க. ஆட்சி தவறிவிட்டது.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், தி.மு.க. அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது.
'வெட்கித் தலைகுனிய வேண்டும்'
"இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர் மு.க. ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலையின் கண்டனப் பதிவு
கோவை விமான நிலையம் அருகில் நடந்த கொடூரச் சம்பவம் குறித்து அண்ணாமலை தனது பதிவில் கூறியிருப்பதாவது:
"கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
தி.மு.க. ஆட்சியின் மீதான குற்றச்சாட்டுகள்
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்குச் சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கு எதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன.
தி.மு.க. அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கவோ, தி.மு.க. ஆட்சி தவறிவிட்டது.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், தி.மு.க. அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது.
'வெட்கித் தலைகுனிய வேண்டும்'
"இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர் மு.க. ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
LIVE 24 X 7









