அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று திடீர் பயணமாக டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய சம்பவம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பி.எஸ்.ஸின் நிலைப்பாடும்
அதிமுக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், கடந்த நவம்பர் 24-ம் தேதி சென்னையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி, "இனியாவது திருந்த வேண்டும், இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" என்று எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், டிசம்பர் 15-ம் தேதி புதிய கட்சி அறிவிப்பை பன்னீர்செல்வம் வெளியிடுவார் என அவரது ஆதரவு நிர்வாகி வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார். மேலும், புதிய கட்சியைத் தொடங்கி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது.
அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு மற்றும் தகவல்
ஓ. பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. ஈடுபட்டு இருந்த நிலையில், அவர் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு 2 நாட்கள் முகாமிட்டு, பா.ஜ.க. மூத்த தலைவர்களை அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, இன்று காலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து 20 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மீண்டும் தன்னை அதிமுகவில் இணைக்கவில்லை என்றால், தனிக் கட்சி தொடங்குவது உறுதி எனவும் அமித்ஷாவிடம் பன்னீர்செல்வம் தெரிவித்தாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சில பா.ஜ.க. தலைவர்களை பன்னீர்செல்வம் சந்திக்கக்கூடும் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ. பன்னீர்செல்வம் டெல்லி முகாமிட்டுள்ள விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓ.பி.எஸ்.ஸின் நிலைப்பாடும்
அதிமுக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், கடந்த நவம்பர் 24-ம் தேதி சென்னையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி, "இனியாவது திருந்த வேண்டும், இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" என்று எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், டிசம்பர் 15-ம் தேதி புதிய கட்சி அறிவிப்பை பன்னீர்செல்வம் வெளியிடுவார் என அவரது ஆதரவு நிர்வாகி வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார். மேலும், புதிய கட்சியைத் தொடங்கி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது.
அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு மற்றும் தகவல்
ஓ. பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. ஈடுபட்டு இருந்த நிலையில், அவர் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு 2 நாட்கள் முகாமிட்டு, பா.ஜ.க. மூத்த தலைவர்களை அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, இன்று காலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து 20 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மீண்டும் தன்னை அதிமுகவில் இணைக்கவில்லை என்றால், தனிக் கட்சி தொடங்குவது உறுதி எனவும் அமித்ஷாவிடம் பன்னீர்செல்வம் தெரிவித்தாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சில பா.ஜ.க. தலைவர்களை பன்னீர்செல்வம் சந்திக்கக்கூடும் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ. பன்னீர்செல்வம் டெல்லி முகாமிட்டுள்ள விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
LIVE 24 X 7








