மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 ) மாநிலங்களவையில் எம்.பி.யாக கமல்ஹாசன் எனும் நான் என்று தமிழில் பதவியேற்றுக் கொண்டார். திமுக கூட்டணியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதேப்போல் அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்தது.
இந்த காலியிடங்களை நிரப்ப ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கியது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழில் உறுதிமொழியேற்ற கமல்ஹாசன்:
"மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும், விழுமிய முறைமையுன் உறுதிகூறுகிறேன். வணக்கம்" என உறுதி எடுத்து, பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார் கமல்ஹாசன்.
நாடாளுமன்றத்தில் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், #கமல்ஹாசன்_எனும் நான் என்ற ஹேஷ்டேக்கை கமல்ஹாசனின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
திமுகவின் பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.
அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகியோர் வரும் திங்களன்று எம்.பி.யாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதேப்போல் அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்தது.
இந்த காலியிடங்களை நிரப்ப ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கியது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழில் உறுதிமொழியேற்ற கமல்ஹாசன்:
"மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும், விழுமிய முறைமையுன் உறுதிகூறுகிறேன். வணக்கம்" என உறுதி எடுத்து, பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார் கமல்ஹாசன்.
நாடாளுமன்றத்தில் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், #கமல்ஹாசன்_எனும் நான் என்ற ஹேஷ்டேக்கை கமல்ஹாசனின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
திமுகவின் பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.
அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகியோர் வரும் திங்களன்று எம்.பி.யாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.