மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 102வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கருணாநிதி படத்திற்கு மரியாதை
கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில்ம், அனைத்து மாவட்டங்களிலும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் வீட்டில் இருந்த தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.பின்னர் அங்கிருந்து சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளுக்கு முதலலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கருணாநிதியின் பணிகள் போற்றப்படும்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ சமூகநீதி, சாமானியர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்ட கருணாநிதியின் அரும்பணிகள் என்றும் போற்றப்படும். கொள்கை, சரித்திர சாதனைகள், கலாச்சார நினைவுகளோடு என்றும் நம்மோடு வாழ்பவர் கருணாநிதி என கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி பிடிக்க வேண்டும் திமுக பொதுக்குழுவிலும் சொல்லியுள்ளேன். இதுதான் தொண்டர்களுக்கு பிறந்தநாள் செய்தி.
பயந்து ஒப்புதல் கொடுத்திருக்கலாம்
கலைஞர் 102வது பிறந்தநாள் முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மூலம் 102 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியது குறித்த கேள்விக்கு, அது எதிர்பார்த்ததுதான். சட்டப்பேரவையில் இது குறித்து தெரிவித்துள்ளேன். ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம்” என தெரிவித்தார்.
கருணாநிதி படத்திற்கு மரியாதை
கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில்ம், அனைத்து மாவட்டங்களிலும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் வீட்டில் இருந்த தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.பின்னர் அங்கிருந்து சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளுக்கு முதலலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கருணாநிதியின் பணிகள் போற்றப்படும்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ சமூகநீதி, சாமானியர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்ட கருணாநிதியின் அரும்பணிகள் என்றும் போற்றப்படும். கொள்கை, சரித்திர சாதனைகள், கலாச்சார நினைவுகளோடு என்றும் நம்மோடு வாழ்பவர் கருணாநிதி என கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி பிடிக்க வேண்டும் திமுக பொதுக்குழுவிலும் சொல்லியுள்ளேன். இதுதான் தொண்டர்களுக்கு பிறந்தநாள் செய்தி.
பயந்து ஒப்புதல் கொடுத்திருக்கலாம்
கலைஞர் 102வது பிறந்தநாள் முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மூலம் 102 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியது குறித்த கேள்விக்கு, அது எதிர்பார்த்ததுதான். சட்டப்பேரவையில் இது குறித்து தெரிவித்துள்ளேன். ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம்” என தெரிவித்தார்.