இந்தப் போராட்டத்தில் அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். பொது வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை சார்ந்த ஓட்டுநர்கள் வராத நிலையில், தற்காலிக பணியாளர்கள் கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டாவிலிருந்து கொல்லம் சென்ற கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநர் ஷிபு தாமஸ், தலைமையில் ஹெல்மெட் அணிந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “வேலைநிறுத்தத்தை மீறிய இயக்கப்பட்ட பேருந்துகளை போராட்டக்காரர்கள் மறித்து தாக்குகின்றனர். இன்று காலை கொள்வதில் ஒரு பேருந்து தாக்குதலுக்கு உள்ளது. அதனால் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்துள்ளேன்” என்று தெரிவித்தார். இந்த பேருந்தை வேலைநிறுத்தக்காரர்கள் காலையில் அடூரில் மறித்தது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் அரசு பேருந்நு ஓட்டுநர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்தை இயக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
പൊതുപണിമുടക്ക് ദിവസം ഹെൽമറ്റ് ധരിച്ച്
— AJI THOMAS (@AjiThomas4BJP) July 9, 2025
KSRTC ഡ്രൈവർ.
പത്തനംതിട്ടയിൽ നിന്നും കൊല്ലത്തേക്ക്
ബസ്സോടിച്ച ഷിബു തോമസാണ് ഹെൽമറ്റ്
ധരിച്ചത്.
പണിമുടക്കനുകൂലികൾ കല്ലെറിഞ്ഞാൽ
നഷ്ടം ഷിബുവിനും കുടുംബത്തിനും മാത്രമാണ്.
KSRTC യോ സർക്കാരോ ഒപ്പമുണ്ടാവില്ല.
മുൻകരുതലെടുത്ത ഷിബുവിന് അഭിനന്ദനങ്ങൾ👏👏 pic.twitter.com/vFuQ3K9awr