ஐபிஎல் 2025

RCB VS PBKS IPL FINAL: ஐபிஎல் 2025 வெற்றி கோப்பையை வெல்லப்போவது யார்? பெங்களூரு-பஞ்சாப் இன்று பலப்பரீட்சை!

நடப்பு 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

 RCB VS PBKS IPL FINAL:  ஐபிஎல் 2025 வெற்றி கோப்பையை வெல்லப்போவது யார்?  பெங்களூரு-பஞ்சாப் இன்று பலப்பரீட்சை!
ஐபிஎல் 2025 கோப்பையை வெல்லப்போவது யார்? பெங்களூரு-பஞ்சாப் இன்று பலப்பரீட்சை!
ஐபிஎல் 2025 18-வது சீசன் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கிய நிலையில், லீக் போட்டிகள், ப்ளே ஆஃப் போட்டிகளில் வென்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஜூன் -6) இறுதிப்போட்டியில் களம்காண்கின்றன. இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய போட்டியில், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளில் எந்த அணி கோப்பையை வென்றாலும், அந்த அணிக்கு முதல் வெற்றிக்கோப்பையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றில், இதுவரை கோப்பையை வெல்லாத இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவது இதுவே முதல்முறை என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை நேருக்கு நேர் 36 முறை மோதியுள்ளன. இதில் பெங்களூரு 18 முறையும், பஞ்சாப் 18 முறையும் வெற்றிப்பெற்றுள்ளன. நடப்பு சீசனில் மட்டும் இரண்டு அணிகளும், தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், குவாலிஃபையர் போட்டியில் ஆர்சிபி வெற்றிபெற்றது. இரண்டு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால், இந்த இறுதிப்போட்டியில் யார் வெல்வார்கள் என்பதும், முதன்முறையாக யார் கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் பெங்களூருவை அணியை (50 சதவீதம்) காட்டிலும்பஞ்சாப் அணிக்கே (71.43%) அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. நரேந்திர மோடி மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 5 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கும் அகமதாபாத்தில், 5% மட்டுமே மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வானிலை காரணமாக போட்டிக்கு எந்த தடங்கல் வரவும் வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.