தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பாறையூர் அருகில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி-கார் மோதிய விபத்தில் கேரள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். நடிகர் சைன் டாம் சாக்கோ மற்றும் அவரது சகோதரர் படுகாயத்துடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் போதைப்பொருள் விற்பனை வழக்கில் தொடர்புடையதாக கேரள போலீசார் ஷைன் டாம் சாக்கோ தங்கியிருந்த இடத்தில் ஆய்வு செய்தனர். அதற்கு முன்னதாக அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து அவர் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வெளியாகி பேசுபொருளாக மாறியது. மலையாள புகழ் பெற்ற நடிகரான இவர் தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி ஆகிய தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமடைந்தவர்.
கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் புகழ்பெற்ற சையின் தாம் சாக்கோஸ். அவரது தந்தையின் மருத்துவ பரிசோதனைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்க்கு சென்றுள்ளார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அவரது சகோதரர், நடிகரின் தந்தை ஜாக்கோ, தாய் மரியா கார்மல், மேலாளர் அணிஸ் உள்ளிட்ட ஐந்து பேர் நேற்று இரவு காரில் கிளம்பி உள்ளனர்.
இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பாறையூர் என்ற இடத்தில் லாரி மீது கார் பயங்கரமாக மோதியதில், நடிகரின் தந்தை ஜாக்கோ பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் காரில் பயணித்த நான்கு பேரும் லேசான காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை அருகிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கும் அவரது அம்மாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபல மலையாள நடிகர் கார் விபத்தில் சிக்கியதும், அதில் அவரது தந்தை உயிரிழந்தது கேரள ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் போதைப்பொருள் விற்பனை வழக்கில் தொடர்புடையதாக கேரள போலீசார் ஷைன் டாம் சாக்கோ தங்கியிருந்த இடத்தில் ஆய்வு செய்தனர். அதற்கு முன்னதாக அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து அவர் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வெளியாகி பேசுபொருளாக மாறியது. மலையாள புகழ் பெற்ற நடிகரான இவர் தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி ஆகிய தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமடைந்தவர்.
கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் புகழ்பெற்ற சையின் தாம் சாக்கோஸ். அவரது தந்தையின் மருத்துவ பரிசோதனைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்க்கு சென்றுள்ளார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அவரது சகோதரர், நடிகரின் தந்தை ஜாக்கோ, தாய் மரியா கார்மல், மேலாளர் அணிஸ் உள்ளிட்ட ஐந்து பேர் நேற்று இரவு காரில் கிளம்பி உள்ளனர்.
இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பாறையூர் என்ற இடத்தில் லாரி மீது கார் பயங்கரமாக மோதியதில், நடிகரின் தந்தை ஜாக்கோ பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் காரில் பயணித்த நான்கு பேரும் லேசான காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை அருகிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கும் அவரது அம்மாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபல மலையாள நடிகர் கார் விபத்தில் சிக்கியதும், அதில் அவரது தந்தை உயிரிழந்தது கேரள ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.