துணை நடிகருக்கு தில்ல பாத்தியா.. முதல்வர் போஸ்டுக்கு கமெண்ட் அடித்த சௌந்தரராஜா

Actor Soundararaja Criticize CM Stalin Tweet : செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்த நிலையில், அதனை துணை நடிகர் சௌந்தரராஜா விமர்சித்துள்ளார்.

Sep 26, 2024 - 14:23
Sep 26, 2024 - 16:09
 0
துணை நடிகருக்கு தில்ல பாத்தியா.. முதல்வர் போஸ்டுக்கு கமெண்ட் அடித்த சௌந்தரராஜா
மு.க.ஸ்டாலின் கருத்துக்கு துணை நடிகர் சௌந்தரராஜா விமர்சனம்

Actor Soundararaja Criticize CM Stalin Tweet : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி(Senthil Balaji), கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி (Senthi Balaji) போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 47 பேர் மீது நான்கு வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.

பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு(Senthil Balaji Case) தொடர்ந்திருந்தார். வழக்கு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்புக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு (Senthil Balaji Case) தொடர்ந்திருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின், ஜார்ஜ் மாசிஹ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அதேபோல், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து இருந்தார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த ஸ்டாலின், ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.

அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.

கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்.

உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த சௌந்தரராஜா(Actor Soundararaja) விமர்சித்து உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “செந்தில் பாலாஜி தியாகி ஒன்றும் இல்லை. அவர் ஒரு ஊழல் குற்றவாளி. வழக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை. நீங்கள் இப்படி கூறுவது வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow