K U M U D A M   N E W S

Tamilnadu

Rain Update: சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு எப்படி..? நீலகிரி, கோவையன்ஸ் உஷார்!

Tamil Nadu Weather Update Today : தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

20 பேர் பலி.. 35 பேர் பாதிப்பு - வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி?

Chandipura Virus : தமிழ்நாட்டில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரியில் தொடரும் கனமழை... அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

Tamil Nadu Weather Update : தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதேநேரம் நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழையால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்.. ஒன்று திரண்ட தமிழகம்.. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்க உள்ளன. அதிமுகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.

யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா?.. மின்வாரியம் விளக்கம்!

''குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டு தலம் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்படும் வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்''

மதுவிலக்கு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது... என்னென்ன தண்டனைகள்?... முழு விவரம்!

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள், பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

சட்டென மாறிய வானிலை.. தமிழ்நாட்டின் பல இடங்களில் கொட்டும் மழை... சென்னையில் வெப்பம் தணிந்தது!

சென்னை புறநகர் பகுதிகளான செங்குன்றம், ஆவடி பகுதிகளிலும் மழை கொட்டியது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

இதுக்கு ஒரு விடிவுகாலமே இல்லையா?.. புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் மாறி, மாறி கடிதம் எழுதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களே தவிர, இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட இதுவரை எந்த நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

'2026 டார்கெட்'.. 'இளைஞர்கள் பலம்'.. எடப்பாடியின் மாஸ்டர் பிளான்.. நிர்வாகிகளிடம் பேசியது என்ன?

''கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாதம் இருமுறை மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். இளைஞர்களை அதிகளவில் கட்சியில் சேர்த்து அவர்களுக்கும் முக்கிய பொறுப்புகளில் வாய்ப்பளியுங்கள்''

66 பேர் உயிரிழந்தும் திருந்தாத விக்கிரவாண்டி.. கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறையும்,புதுச்சேரி காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கள்ளச்சாராயத்தின் தீமை குறித்து மது குடிப்பவர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

4,500 பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை... இதுதான் அரசின் சாதனையா?... ராமதாஸ் கடும் தாக்கு!

''தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும். கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்''

ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை மானநஷ்ட வழக்கு... 'சும்மா விடமாட்டேன்' என ஆவேசம்!

''மானநஷ்ட வழக்கை கடைசி வரை எடுத்து சென்று ஆர்எஸ்.பாரதியை கண்டிப்பாக சிறைக்கு அனுப்புவோம். பயம் காரணமாக அவரை யாரும் எதிர்த்து பேசுவதில்லை''

புதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை.. கைவிரித்த தமிழ்நாடு அரசு... என்ன காரணம்?

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன், மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த விதிமுறையை தற்போது மத்திய அரசு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

'இனி ஸ்டாலினிடம் சொல்லி எந்த பயனும் இல்லை'.. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு ட்வீட்.. என்ன விஷயம்?

''மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்''

'இந்தி கற்றுக் கொள்ளுங்கள்'... கிரிக்கெட் வீரர் நடராஜன் பேச்சு... கொதிக்கும் நெட்டிசன்கள்!

''நடராஜன் கிரிக்கெட்டுக்காக மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டியது இருப்பதால் அவர் இந்தி மொழியை கற்றுக் கொள்ளட்டும். நாங்கள் ஏன் இந்தியை கற்க வேண்டும்?''

காலையிலேயே சென்னைவாசிகளுக்கு 'ஜில்' நியூஸ்... இன்றும், நாளையும் கொட்டப்போகுது மழை!

10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வேங்கைவயல் சம்பவம்: ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

வேங்கைவயல் சம்பவத்தில் சந்தேகத்துக்குரியவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் குரல் மாதிரி சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது... தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை சுட்டிக்காட்டியும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தும் பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பாஜக மாநில செயற்குழு கூட்டம்: கள்ளக்குறிச்சி முதல் முல்லை பெரியாறு வரை... 7 தீர்மானங்கள் என்னென்ன?

பாஜக செயற்குழு கூட்டத்தில் மக்களவை தேர்தலில் தமிழ்நாடு பாஜக அடைந்த தோல்வி குறித்தும், பாஜகவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்... ராகுல் காந்தி, அன்புமணி, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யட்டார். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான், தமிழிசை செளந்தர்ராஜன், கமல்ஹாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இனி வெயிலுக்கு ஓய்வு... தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை... குடையை ரெடியா எடுத்து வைங்க மக்களே!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களிலும் 30 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் கொளுத்தியது.

அட! சென்னையிலும் மழை கொட்டப் போகுதா... குடையை எடுத்து ரெடியா இருங்க மக்களே!

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.