போலீஸ் உருவாக்கிய கதை.. திமுகவால் தீட்டப்பட்ட கதை - ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு
வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கேசவ வினாயகம், கோவர்தன் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கேசவ வினாயகம், கோவர்தன் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
''கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாதம் இருமுறை மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். இளைஞர்களை அதிகளவில் கட்சியில் சேர்த்து அவர்களுக்கும் முக்கிய பொறுப்புகளில் வாய்ப்பளியுங்கள்''
276 வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு சிறு, சிறு பிரச்சனைகளை தவிர அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.
''தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும். கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்''
''மானநஷ்ட வழக்கை கடைசி வரை எடுத்து சென்று ஆர்எஸ்.பாரதியை கண்டிப்பாக சிறைக்கு அனுப்புவோம். பயம் காரணமாக அவரை யாரும் எதிர்த்து பேசுவதில்லை''
''மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்''
''திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன்''
கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும்.. எல்லாம் பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று நினைக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு அலுவலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவடைந்தது.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் என்றும் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் பதவிக்கு கோடிக் கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக மாணவரணி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிப் பெற்றதன் மூலம், மக்களவை உறுப்பினராக முதன்முறையாக அடியெடுத்து வைத்துள்ளார் துரை வைகோ. மக்களவையில் அவரது கன்னி பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை டெல்லி நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில்,மாணவர்களுக்கு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது. மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியை நாட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரமின்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி சட்டசபையில் முழக்கமிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் இப்போதிருந்தே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபையில் 110 விதி எண் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,வரும் 2026 ஜனவரிக்கு 75000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.
சட்டசபையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.