K U M U D A M   N E W S
Promotional Banner

மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்து ரீல்ஸ் வீடியோ.. பாய்ந்தது வழக்கு.. மன்னிப்பு கேட்ட ஹர்பஜன் சிங்!

'நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்று அந்த வீடியோவை வெளியிடவில்லை. 15 நாட்கள் தொடர்ந்து விளையாடியதால் எங்களின் உடல்வலியை குறிப்பிடும் வகையிலேயே ரீல்ஸ் வெளியிட்டோம். இந்த வீடியோ மூலம் யார் மனதாவது புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்''

Indian2 Box Office: மொத்தமாக படுத்துவிட்ட இந்தியன் 2... 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவு தானா?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 கடந்த வாரம் வெளியான நிலையில், இந்தப் படத்தின் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி காட்டும் சென்னை போலீஸ்.. 2 நாட்களில் 77 குற்றவாளிகள் கைது...

புதிய காவல் ஆணையராக அருண் மாற்றப்பட்டபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

போய் அள்ள சொல்லுடா... மணல் கொள்ளைக்கு துணை போன ஆய்வாளர் சஸ்பெண்ட்?

புதுச்சேரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரிடம் காவல் ஆய்வாளர் பேசும் ஆடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருணாநிதி பற்றி சீமான் பேசினால் விஜயலெட்சுமி பற்றி பேசுவோம் - எச்சரிக்கும் சுப வீரபாண்டியன்

ஜெயலலிதாவைப் பற்றி இவ்வாறு பேசிவிட்டு, எடப்பாடி பழனிசாமியையும் தரக்குறைவாக விமர்சித்துவிட்டு இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை அவர் கேட்கிறார்.

கர்நாடகாவிற்கு தமிழ்நாடு பலத்தை காட்ட வேண்டும்; கூட்டத்தை கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டால் தமிழ்நாடு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்திற்கு காட்ட முடியும்.

Engineering Council: பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு... அமைச்சர் பொன்முடி கொடுத்த அப்டேட்

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.

Euro 2024 Final: யூரோ சாம்பியன் ஃபைனல்... இங்கிலாந்து அணியை போராடி வென்ற ஸ்பெயின்!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது ஸ்பெயின்.

Indian2 Box Office: உலக நாயகனுக்கு வந்த சோதனையா இது..? பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி வாங்கிய இந்தியன் 2!

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் கடந்த வாரம் 12ம் தேதி வெளியானது. முதல் நாளில் இருந்தே இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதால், பாக்ஸ் ஆபிஸ் வசூலும் படுமோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே பந்தில் 13 ரன்கள்.. ஜெய்ஸ்வால் உலக சாதனை...

முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 115 ரன்களே எடுத்திருந்தபோதும், இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் 102 ரன்களுக்குள் சுருண்டது.

என்னை மறந்து விட்டார்கள்; கேப்டனாக நியமித்தது நான்தான் - கங்குலி வேதனை

அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான், விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் யார்? - ரெய்னா, ஹர்பஜன் சொன்னது என்ன?

சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா, ஆரோன் பிஞ்ச் ஆகியோரிடம் வர்ணனையாளர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக யாரை கருதுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

ஆம்ஸ்ட்ராங்கையும் காப்பாற்றவில்லை.. திருவேங்கடத்தையும் காப்பாற்றவில்லை... சீமான் கண்டனம்

விசாரணை சிறைவாசி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவேங்கடம் என்கவுண்டர் நடந்தது எப்படி?.. காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்..

திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதின் பின்னணியில் திமுக உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 3 திமுகவினர்; உண்மையை மறைக்க என்கவுன்ட்டர் - அண்ணாமலை

காலை 7 மணியளவில் அவரை சுற்றி வளைத்த போது, திடீரென அந்த தகரக் கொட்டாயில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, திருவேங்கடம் ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி சுட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கை முதல் ஆளாக வெட்டிய திருவேங்கடம்... 3 நாட்களில் 2 என்கவுன்ட்டரால் பரபரப்பு...

மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது திடீரென ஆடுதொட்டி அருகே திருவேங்கடம் போலீசாருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை... புதிய சிசிடிவி காட்சி வெளியீடு... எதிர்க்கட்சி கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி?

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பிச் செல்லும் முதல் சிசிடிவி காட்சிகள் முன்பு வெளியாகி இருந்தது. ஆனால் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களும், சிசிடிவி காட்சிகளில் பதிவானவர்களும் வேறு மாதிரி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

யாரை காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்... சந்தேகம் எழுப்பும் எடப்பாடி பழனிசாமி!

''காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது? கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டுதான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?''

'நண்பர் டிரம்ப் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன்.. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை' - பிரதமர் மோடி

மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் உடனே சுதாரித்துக் கொண்டு விலகினார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரது காதில் லேசாக உரசிக் கொண்டு சென்றதால் காயம் அடைந்தார்.

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுன்டர்.. போலீஸ் அதிரடி... நடந்தது என்ன?

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் முக்கிய குற்றவாளி. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படையை திரட்டியதும், அவரை எங்கு வெட்டினால் உடனே இறப்பார்? என்ற திட்டங்களை தீட்டியதுடன், அதிக இடங்களில் ஆம்ஸ்ட்ராங்கை இவர் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை... அதிபர் ஜோ பைடன் கண்டனம்!

''அமெரிக்க ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இந்த சம்பவத்தில் டிரம்புக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லை என்பது நிம்மதி அளிக்கிறது''

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு... மருத்துவமனையில் அனுமதி.. அமெரிக்காவில் பரபரப்பு!

மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரம்ப்பை சூழ்ந்து அவரை கேடயம்போல் பாதுகாத்தனர். ஆனாலும் டிரம்ப்பின் காதில் துப்பாக்கி குண்டு லேசாக உரசி காயம் அடைந்து ரத்தம் வடிந்தததால் பரபரப்பு நிலவியது.

ஜிம்பாப்வே பவுலர்களை கதறவிட்ட ஜெய்ஸ்வால்... அதிரடி அரைசதம்.. டி20 தொடரை வென்றது இந்தியா!

ஒருபக்கம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நாலாபக்கமும் பெளண்டரிகளை விளாசித் தள்ள, கேப்டன் சுப்மன் கில் தனக்கே உரித்தான ஸ்டைலிஷ் ஷாட்களை அடித்து பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தார். ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா உள்பட 6 பெளலர்கள் பந்துவீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

பணத்தை கொடுத்து வாக்கை பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பெருமைப்படலாமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

''திமுக-அதிமுக ஜென்ம எதிரி. ஆனால் இந்த தேர்தலில் காசை வாங்கி கொண்டு அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தி உள்ளார்கள். இந்த தேர்தல் நேர்மையான முறையில் நடந்து இருந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும் என்பது தான் கள நிலவரம்''

இந்தியா கூட்டணி 'மாஸ்'.. 13 தொகுதிகளில் 10ல் வெற்றி.. பாஜக கோட்டையில் காங்கிரஸ் அபாரம்!

பீகார் மாநிலம் ரூபாலி தொகுதியில் நடந்த தேர்தலில் அனைவரும் அதிசயிக்கும்விதமாக சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 68,070 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பலம் வாய்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் கலாதர் பிரசாத் மண்டல் 59,824 வாக்குகளும், ராஷ்டீரிய ஜனதா தளத்தின் பீமா பாரதி 59,824 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.