நாங்கள் தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபிசர்களா? - Annamalai | Karur Stampede | TVK Vijay | Kumudam News
நாங்கள் தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபிசர்களா? - Annamalai | Karur Stampede | TVK Vijay | Kumudam News
நாங்கள் தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபிசர்களா? - Annamalai | Karur Stampede | TVK Vijay | Kumudam News
நாங்கள் தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபிசர்களா? - Annamalai | Karur Stampede | TVK Vijay | Kumudam News
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.
திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.
விஜய் மக்கள் சந்திப்பு பயணம் ஒத்திவைப்பு | TVK Vijay Meeting | Kumudam News
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) காலை 11 மணி முதல் தொடங்குகிறது என அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.