K U M U D A M   N E W S

AI

நதிகள் சீரமைப்பு.. முதலமைச்சர் ஆலோசனை

சென்னையில் உள்ள நதிகள் சீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

அதிமுகவினர் மீது பொய் வழக்கு... கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி...

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திமுக அரசு முடக்க நினைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் 57 ஸ்பாக்கள் மூடல்

கோவை மாநகர பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டதாக 57 மசாஜ் செண்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் கடந்த 5 நாட்களில் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

BREAKING | சூட்கேஸில் பெண்ணின் உடல்: கொலையாளிக்கு கோர்ட் போட்ட உத்தரவு

சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணை கொலை செய்த மணிகண்டன் என்பவருக்கு நீதிமன்றக் காவல். மணிகண்டனை அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

JUST IN | மாஞ்சோலை விவகாரம் – பிபிடிசி நிர்வாகத்திடம் இன்று விசாரணை

நெல்லை மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக பிபிடிசி தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் இன்று விசாரணை. 2 நாட்களாக தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று நிர்வாகத்திடம் விசாரணை நடைபெறுகிறது

”இதனால் திமுகவின் சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும்” - கடம்பூர் ராஜு கடும் தாக்கு

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதற்கு திமுகவில் உள்ள சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும் என வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்

சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்... சிக்கிய இளைஞருக்கு காப்பு

சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்... சிக்கிய இளைஞருக்கு காப்பு

'ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு'.. பகுஜன் சமாஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

''காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிப்பதால், செல்வபெருந்தகையை கைது செய்வதில் ஆளும் கட்சியான திமுகவும், காவல் துறையினரும் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆகவே செல்வபெருந்தகையை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும்'' என்று கடிதத்தில் கூறப்படுள்ளது.

#BREAKING | தீட்சிதர்கள் விற்ற நிலம் - நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் தீட்சிதர்கள் விற்பனை செய்த நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லப்பர் பந்து, நந்தன், கோழிப்பண்ணை செல்லத்துரை... இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் 6 படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் 6 தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன. இதில், எந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளது என இப்போது பார்க்கலாம்.

Vettaiyan: வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் கேரக்டர்... Wow! செம மாஸ்ஸாக வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தில் இருந்து அமிதாப் பச்சனின் கேரக்டர் கிளிப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்புகள்... வெளியான ஆய்வு முடிவுகள்... அதிர்ச்சியில் பக்தர்கள்!

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்புகள், மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

#BREAKING || திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்னதாக முந்தையை ஆட்சியில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக சந்திரபாபு நாயடு குற்றம்சாட்டியிருந்தார்.

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தப் போகுது... வானிலை ஆய்வு மையம் தகவல்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 19) இரவுக்குள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!

துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மழை வெள்ளம்.... ரூ. 25 கோடியை அள்ளிக் கொடுத்த அதானி குழுமம்!

Adani Group Funds To Andhra Flood Relief : ஆந்திராவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 25 கோடியை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் அதானி குழுமம் வழங்கியுள்ளது.

EPS Case Update : தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு.. இபிஎஸ் ஆஜராவதில் இருந்து விலக்கு

Dayanidhi Maran Defamation Case on EPS : எடப்பாடி பழனிச்சாமிக்க்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் அதிகாலையில் ஷாக்.. சூட்கேசில் கிடந்த பெண் சடலம்.. முக்கிய குற்றவாளி கைது..

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... கிடுகிடுவென சரியும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் பிரபல திரையரங்கிற்கு சீல்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.6செ லட்சம் வரியை செலுத்தாதல் சென்னை நங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் வெற்றிவேல் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்

BREAKING | சென்னையில் கொடூரம்.. துண்டு துண்டாக சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்..

சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலை. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய நபர் குறித்து போலீசார் விசாரணை

மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா வழக்கு.. நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிக மது ஒழிப்பு மாநாடு: "வேடிக்கையான ஒன்று.." என செல்லூர் ராஜூ விமர்சனம்

மது ஒழிப்பு மாநாட்டை திமுகவை அழைத்து நடத்துவது வேடிக்கையான ஒன்று என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்