K U M U D A M   N E W S

தங்கம் விலை புதிய உச்சம்.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. சவரன் ரூ.480 அதிகரிப்பு!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரு சவரன் ரூ.85,000-ஐ தாண்டியது!

இன்று (செப். 27, 2025) தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் ரூ.10,640-க்கும், ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.3,360 உயர்ந்துள்ளது.

சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டது - ஜெயக்குமார் அதிரடி!

மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

TVK தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்: இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3ஆம் கட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் 3ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.

நடிகர் விஜய்க்காகப் பால் விநியோகத்தை தடுத்த போலீஸ் - நடவடிக்கை எடுக்கக் கோரி பால் முகவர்கள் சங்கம் புகார்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் நாமக்கல் வருகையையொட்டி, பால் விநியோகம் செய்யச் சென்ற பால் முகவர் சங்க நிர்வாகியைத் தடுத்து நிறுத்தி, மிரட்டிய போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

மணிப்பூர், ஹரியானாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: அதிகாலை அதிர்வால் மக்கள் பீதி!

மணிப்பூரில் நேற்று மாலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

அமராவதி உணவகத்தில் 2-வது நாளாக ED சோதனை: சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து தீவிர ஆய்வு!

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள பிரபலமான அமராவதி உணவகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!

சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஜயதசமி அன்று அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை: விரைந்து செயல்பட உத்தரவு!

விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.