K U M U D A M   N E W S

கரூரில் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா? விஜய்-யின் 'ஒய் பிரிவு' அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விசாரணை!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தானில் சாம்பியன் பட்டம்.. உலக செஸ் சாம்பியன் ஷர்வானிகாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் அருகே பயங்கர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உடல் கருகி பலி!

விழுப்புரம் அருகே நடந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகிப் பலியான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

இடுக்கியில் சோகம்.. ஹோட்டல் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 3 தமிழக தொழிலாளர்கள் பலி!

கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு ஹோட்டலின் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் தொட்டியை இடித்து உடல்களை மீட்டனர்.

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 1, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

35 கோடி ரூபாய் கோகைன் கடத்திய ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ பட நடிகர் சென்னையில் கைது!

பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆசியக் கோப்பை சர்ச்சையில் புதிய திருப்பம்: பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைப்பு!

ஆசியக் கோப்பைப் பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வியிடம் கோப்பையைப் பெற இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், நக்வி தற்போது கோப்பையைப் போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளார்.

‘ஆடுகளம்’ பாணியில் டீ-சர்ட்டுக்குள் சேவல் திருட்டு! - சிசிடிவி காட்சிகள் வைரல்; கோவையில் அதிர்ச்சி!

கோவை போத்தனூர் அருகே திருடிய சேவலை டீ-சர்ட்டுக்குள் மறைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் துயர சம்பவம்: தவெக தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

டிஜிபி அலுவலகம் முன்பே பைக் ரேஸ்: சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்; துரத்திப் பிடித்ததில் ஒருவர் கைது!

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.