K U M U D A M   N E W S

முதலமைச்சர்

”மன்னிப்பு கேட்டே ஆகணும்..” அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் மகன் அனுப்பிய நோட்டீஸ்

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு எதிராக அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் 10 கோடி ரூபாய் மனநஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு... ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன்..?

அமைச்சர் ராஜகண்ணப்பன் 411 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக, அறப்போர் இயக்கம் ஊழல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”திமுக ஆட்சியில் கனஜோராக கஞ்சா விற்பனை..” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதனை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | CM Stalin | Namakkal

நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

"தமிழையும் திராவிடத்தையும் தொட்டு கூட பார்க்க முடியாது"

திமுக கடைசித் தொண்டன் மற்றும் தமிழனும் இருக்கும் வரை, தமிழையும் திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழிசை சௌந்தரராஜனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

எவ்வளவு சத்தமிட்டாலும் தமிழ்நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் என்றும் கலக்கப் போவதில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் தொகுதியில் இப்படி ஒரு அவலமா..? - மக்கள் கடும் வேதனை

சென்னை கொளத்தூர் பகவதி அம்மாள் தெருவில் மழைநீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. அதனுடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தென் மாநில காவல்துறை இயக்குனர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் முதலமைச்சர் உரை

தென் மாநில காவல்துறை இயக்குனர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள்... நீக்கப்பட்டதுதான்... உதயநிதி பதிலில் முதிர்ச்சியில்லை” EPS ஆவேசம்!

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நீக்கும் நடைமுறை ஜெயலலிதா காலம் முதலே இருப்பது தான் என்றும், ஒரு சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால் அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக பாதையில் விஜய்... உதயநிதிக்கு பயங்கர புரோமோஷன்... வெளுத்து வாங்கும் அர்ஜுன் சம்பத்!

உதயநிதியை ப்ரொமோட் செய்வதற்காக சீனியர் அமைச்சர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

கொட்டித் தீர்த்த கனமழை.. தொடரும் மீட்பு பணி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Chennai Rain: சென்னையில் வெள்ள நீர் அகற்றும் பணிகள்... முதலமைச்சருக்கு ராமதாஸ் முக்கியமான கோரிக்கை!

சென்னையில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், அதன் மீட்புப் பணிகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் ஸ்டாலினிடம் முக்கியமான கோரிக்கை வைத்துள்ளார்.

Chennai Rain: அம்மா உணவகத்தில் இலவச உணவு ரெடி... சென்னையில் போக்குவரத்து நெரிசல் எப்படி..?

சென்னையில் பெய்த கனமழை காரணமாக, அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

#BREAKING: மீட்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை | Kumudam News 24x7

வடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகல் குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை... முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வட சென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

“பல இடங்களில் தண்ணீர் தேக்கம்... சென்னை மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்...”ராமதாஸ் விளாசல்!

6 செ.மீட்டர் மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் தமிழக அரசு மீதும், சென்னை மாநாகராட்சி மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

"வடகிழக்கு பருவமழை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.." - பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Tamilnadu Rain: ”மீட்புப் பணிகள் இல்லாமல் ஆலோசனைக் கூட்டமா?” திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளாத ஸ்டாலினின் திமுக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கோயிலில் தங்கும் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.68.36 கோடியில் ரூ.68.36 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

#JUSTIN: RED ALERT-க்கு ரெடியாகும் சென்னை.. முதலமைச்சர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை

‘நாகரீக சமூகத்தில் இதற்கு இடமில்லை’.. பாபா சித்திக் படுகொலை - முதலமைச்சர் கண்டனம்

பாபா சித்திக் படுகொலை சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்... துணை முதல்வர் அதிரடி ஆய்வு

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு

''அனைத்திலும் அரசியல் செய்யவேண்டாம்'' - டென்ஷன் ஆன எல்.முருகன்

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கருணாநிதியின் குடும்பத்தினருக்கு மட்டுமே உபயோகம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மருமகன் முரசொலி செல்வத்தின் உடலை பார்த்த கண் கலங்கிய தயாளு அம்மாள்

மருமகன் முரசொலி செல்வத்தின் உடலை, வீல் சேரில் அமர்ந்தவாறு பார்த்து தயாளு அம்மாள் கண் கலங்கினார்.