K U M U D A M   N E W S

சான்றிதழ் வழங்க லஞ்சம்: தாசில்தார் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

கோவையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான பேரூர் தாசில்தார் உள்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

முன்னாள் காதலியை வேவு பார்த்த வழக்கு: டிடெக்டிவ் ஏஜெண்ட் உட்பட 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்கத் திட்டம்!

ஓய்வுபெற்ற மாஜிஸ்திரேட்டின் மகளை டிடெக்டிவ் ஏஜெண்ட் வைத்து வேவு பார்த்த வழக்கில் கைதான முன்னாள் காதலன் உட்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி.. பெருவுடையார் கோயிலில் சாமி தரிசனம்!

திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.

தாயை சுட்ட மகன்.. சொத்து தகராறில் நடந்த விபரீதம்!

விருத்தாச்சலம் அருகே சொத்து தகராறில் தனது தாயினை சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றது - மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை!

“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுந்தர் பிச்சை நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடி – ப்ளூம்பெர்க் தகவல்!

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடியை தாண்டியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கி தற்போது 120% உயர்வை சந்தித்துள்ளதால், சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பில் இந்த ஏற்றம் என கூறப்படுகிறது.

“வேற மாதிரி தொழில் செஞ்சதால கொன்னேன்”-அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

பாலியல் தொழிலாளி என்பதை மறைத்ததால் கள்ளக்காதலன் வெறிச்செயல்

வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி – பாஜக நிர்வாகி மீது வழக்கு

மதுரை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக பாஜக மகளிர் அணி மாவட்ட செயலாளர் மீது வழக்கு

ஆட்டோ ஓட்டுநருடன் மோதல்: மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி கைதாகி ஜாமினில் விடுதலை!

கோவை குற்றாலம் மூடல்.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், அருவியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.