K U M U D A M   N E W S

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இன்று, நாளையும் இயக்கம்!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, பக்தர்கள் வசதிக்காகத் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இன்று (அக். 2) மற்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது: சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு குறித்து ஜி.கே.வாசன் பேட்டி!

ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

விஜயதசமி சிறப்பு: நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் முதல் பார்வை வெளியீடு!

நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்டப் படமான 'மூக்குத்தி அம்மன் 2'-ன் முதல் பார்வை இன்று (அக். 2) விஜயதசமியை முன்னிட்டு வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜயதசமி: நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் (X) வாழ்த்து!

தீமைக்கு எதிராக நன்மை வென்ற புனித நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு - மாஸ் லுக்கில் பாலகிருஷ்ணா!

நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி ஸ்ரீனு ஆகியோர் நான்காவது முறையாக இணையும் அதிரடித் திரைப்படமான 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் டிசம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

கரூரில் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா? விஜய்-யின் 'ஒய் பிரிவு' அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விசாரணை!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சரஸ்வதி அலங்காரம்: வீணையுடன் காட்சியளித்த அன்னையை காண திரண்ட பக்தர்கள்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று (அக். 2) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அம்மன் வீணையுடன் கூடிய பிரத்யேக சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

இடுக்கியில் சோகம்.. ஹோட்டல் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 3 தமிழக தொழிலாளர்கள் பலி!

கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு ஹோட்டலின் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் தொட்டியை இடித்து உடல்களை மீட்டனர்.

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: மசோதா நிறைவேற்றப்படாததால் பெரும் பரபரப்பு!

புதிய நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அமெரிக்க அரசு நிர்வாகச் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நிபந்தனையை டிரம்ப் அரசு ஏற்காததால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து அரசுச் சேவைகளும் நிறுத்தப்படுகின்றன.