K U M U D A M   N E W S

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 1, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

35 கோடி ரூபாய் கோகைன் கடத்திய ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ பட நடிகர் சென்னையில் கைது!

பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் அக்டோபர் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆசியக் கோப்பை சர்ச்சையில் புதிய திருப்பம்: பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைப்பு!

ஆசியக் கோப்பைப் பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வியிடம் கோப்பையைப் பெற இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், நக்வி தற்போது கோப்பையைப் போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளார்.

‘ஆடுகளம்’ பாணியில் டீ-சர்ட்டுக்குள் சேவல் திருட்டு! - சிசிடிவி காட்சிகள் வைரல்; கோவையில் அதிர்ச்சி!

கோவை போத்தனூர் அருகே திருடிய சேவலை டீ-சர்ட்டுக்குள் மறைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' திரைப்பட வெளியீடு உறுதி: படக்குழு வெளியிட்ட அசத்தல் போஸ்டர்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டியூட்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

கரூர் துயர சம்பவம்: தவெக தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

கள்ளக்காதல் விவகாரம்: ஓனரின் மனைவியுடன் பழகிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை!

பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!

திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.