K U M U D A M   N E W S
Advertisement

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது: சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு குறித்து ஜி.கே.வாசன் பேட்டி!

ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் அக்டோபர் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை சம்பவம்: ஆந்திரப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவலர்கள் கைது!

திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை…சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.

ரூ.1.5 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு: 70 ஆண்டு கால ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: விஏஓ அதிரடி கைது

திருவண்ணாமலை அருகே வாரிசு சான்றிதழ் வழங்க 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் பக்தர்கள்…வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வாழைப்பழம் கொடுத்த அமைச்சர்

அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வாழைப்பழம் வழங்கி அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் சேகர்பாபு

திருவண்ணாமலையில் பாலத்தில் கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி…3 பேர் படுகாயம்

பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.