K U M U D A M   N E W S

தமிழ்

தமிழ்நாட்டில் எத்தனை கோடி வாக்காளர்கள்..? - வெளிவந்தது முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கான விரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆண் வாக்காளர்கள் 3,07,90,791, பெண் வேட்பாளர்கள் 3,19,30,833, 3ம் பாலின வாக்காளர்கள் 8,964 பேர் உள்ளனர் 

தேர்வர்களை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 4 பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 8,932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்திருந்த நிலையில் மேலும் 559 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை.. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். 

விடாது பெய்த கனமழை... கதறும் விவசாயிகள்

வேதபுரி வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வாராததால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆளுநருக்கு ஒரு கருத்து.. உதயநிதிக்கு ஒரு கருத்தா? முதல்வர் செய்வாரா? எச். ராஜா கேள்வி!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநரை திரும்பப் பெற கோரிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை இடை நீக்கம் செய்வாரா? என தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து... உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. இந்த விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்கள் தமிழிசை செளந்தர்ராஜன், எல் முருகன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"அது மைக் பிரச்சினை... தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை..” உதயநிதி ஸ்டாலின் அடடே விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக் சரியாக வேலை செய்யவில்லை எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.

“மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..” டென்ஷனான உதயநிதி... வைரலாகும் வீடியோ!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டென்ஷனான துணை முதலமைச்சர் உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாடச்சொல்லி ஊழியர்களை முறைக்க, அவர்கள் மீண்டும் தவறாக பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Pulsar Bike-ல் சென்று யாசகம்.. ஒரு நாள் வசூல் ரூ.2,000 ஆச்சரியப்படுத்தும் ஹைடெக் யாசகர்

பல்சரில் வலம் வரும் ஹைடெக் யாசகர் ஒரு நாள் வசூல் ரூ.2,000 என ஆச்சரியப்படுத்துகிறார். 

வாக்காளர் பட்டியல் - தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன அப்டேட்

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியீடு. அக்.29 முதல் நவ.28 வரை கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் குறித்து விண்ணப்பிக்கலாம் - தேர்தல் ஆணையம்

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை.. அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!

போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறது எனவும் மூன்று ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு 84 கோடியே 91 லட்சம் நிவாரணம் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

ரயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல வேண்டாம்... பொதுமக்களுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்!

ரயில்களில் அல்லது ரயில்வே நிலையங்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று ரயில் பயணிகளுக்கு சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

#JUSTIN: Hogenakkal Water Level Today : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு | Kumudam News

அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு.

Cyclone Dana: டானா புயல் - எங்கு, எப்போது கரையை கடக்கும்? | Kumudam News 24x7

Cyclone Dana: டானா புயல் - எங்கு, எப்போது கரையை கடக்கும்? | Kumudam News 24x7

திருப்பத்தூரில் வெளுத்து வாங்கும் கனமழை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை. விண்ணமங்கலம், அய்யனூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை-அமைச்சர்கள் எடுத்த அதிரடி முடிவு

தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனைக்குப் பின், தொடர்ச்சியாக பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர்கள் புறக்கணிப்பதாகத் தகவல். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், "திராவிட நல் திருநாடும்" வார்த்தை விடுபட்ட சம்பவம்

வெறியாட்டம் ஆடிய மழை... வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மதுரை

மதுரையில் பெய்த கனமழை காரணமாக அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்களது குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர்

Ramanathapuram Rain : சில்லென மாறிய ராமநாதபுரம் | Tamil Nadu Weather Update

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை. பட்டினம்காத்தான், கேணிக்கரை, அரண்மனை, வெளிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை

14 மாவட்டங்களுக்கு கனமழை.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருக்கு..கனமழை இருக்கு.. - எச்சரிக்கும் வனிலை மையம்..எதிர்கொள்ள தயாரா இருங்க மக்களே!

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தீபாவளி ஆம்னி பஸ் டிக்கெட் பல மடங்கு உயர்வு... கண்டுகொள்ளுமா தமிழக அரசு... பொதுமக்கள் புலம்பல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

TN Rains: கோவை, மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை... வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

#JUSTIN || சொல்லமுடியாத வேதனை - கண் கலங்கும் மதுரை மக்கள்.. | Kumudam News 24x7

மதுரையில் பெய்த கனமழையால் அங்குள்ள உழவர் சந்தை, குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது.

#BREAKING || வங்கக்கடலில் 'டாணா' புயல் உருவானது - நினைக்க முடியாத வேகம் | Kumudam News 24x7

வங்கக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டாணா’ புயலாக உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.