K U M U D A M   N E W S

உயர்நீதிமன்றம்

விக்கிரவாண்டி: சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு.. கைதான மூவருக்கு ஜாமின்

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு.. புலன் விசாரணை நடத்த உத்தரவு..!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"யார் அந்த சார்" யாரும் எதிர்பார்க்காத பதிலை போட்டுடைத்த அண்ணாமலை 

"அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று"

பாமக தொடர்ந்த வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம்.. வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் வெடிகுண்டு? தமிழக அரசுக்கு நீதிபதி அடுக்கடுக்காக கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்ட விவகாரம்.

யானைகளை புதிய மறுவாழ்வு மையத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை - தமிழக அரசு

திருச்சி எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளை புதிதாக அமைக்கப்படும் சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை உறுதி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு  விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை  தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று - தடைவிதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

கட்டிட அனுமதிக்கு  தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசானைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.