K U M U D A M   N E W S

அரசு

தவறி விழுந்த மாணவி.. தலையில் சிக்கிய டயர்.. ஆரணி அருகே அதிர்ச்சி சம்பவம்

ஆரணி அருகே அரசுப் பேருந்தில் சீட் பிடிக்க முயன்ற கல்லூரி மாணவி தவறி விழுந்ததில், டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? - ஆ. ராசா, எம்.பி.

‘பிராமணர்கள் பாதுகாப்பு வலியுறுத்தல்’என்ற போர்வையில் திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என ஆ. ராசா எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தலாமா? - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பொது நன்மை எனக்கூறி மாநில அரசுகள் அனைத்து தனியார் சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 8க்கு ஒன்று என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் உத்தரவு என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவா?- எச்.ராஜாவுக்கு அமைச்சர் பதில்

நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால் தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக  பொறுப்பாளராக வைத்துள்ளனர்.

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு - நடிகை கஸ்தூரிக்கு அமைச்சர் கொடுத்த பதில் 

எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.

MK Stalin in Coimbatore: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

கோவையில் இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

"திமுக அரசின் அலட்சியத்தால் 2 போலீசார் பலி" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசின் அலட்சியத்தால் 2 பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா?- சீமான் சரமாரி கேள்வி

மும்மொழி தெரிந்தால்தான் தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்கிற திமுக அரசின் மறைமுக இந்தி திணிப்பு நடவடிக்கைகள் யாவும், தமிழ் மண்ணில் இன்னொரு மொழிப்போருக்கே வித்திடும் எனவும், அந்தத் தீயில் திராவிடம் செய்யும் துரோகங்கள் யாவும் மொத்தமாய் எரிந்து சாம்பலாகும்

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரைகளை சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.22 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்துவது எளியவர்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு எழுதப்படும் முடிவுரையாகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு முன்னே வந்த மிக முக்கிய அறிவிப்பு..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக இருந்த 2,877 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை.. தமிழக அரசு கொடுத்த கிஃப்ட்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.426.32 கோடியில் கட்டப்பட்டுள்ள 3,268 அடுக்குமாடி குடியிருப்புகளை கானொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகமே திரும்பி பார்க்க இபிஎஸ் சொன்ன வார்த்தை...

அரசுக் கல்லூரிகளில் கௌரவ உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தொகுதிப் பார்வையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்.... எப்போதும் உழைக்க வேண்டும்!

தலைவர் கலைஞர் தனக்குப் பிடித்த ஊரின் பெயராக, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ‘எப்போதும் வென்றான்’ ஊரைச் சொல்வார். எப்போதும் வென்றானாக நாம் பெயர் பெற வேண்டும் என்றால், எப்போதும் உழைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை.. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். 

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை.. அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!

போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறது எனவும் மூன்று ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு 84 கோடியே 91 லட்சம் நிவாரணம் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

ரயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல வேண்டாம்... பொதுமக்களுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்!

ரயில்களில் அல்லது ரயில்வே நிலையங்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று ரயில் பயணிகளுக்கு சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெயிண்ட் அடிப்பது தான் வேலையா? - மத்திய அரசை சாடும் தமிழகம்

இந்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் கண் தானம்? - சுகாதாரத்துறை விளக்கம்

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் இறந்தவர் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உறவினர்களின் அனுமதி இல்லாமல் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

"வருத்தமா இருக்கு.." காரணத்தோடு புது புயலை கிளப்பிய இபிஎஸ்

தமிழ்நாடு போதைப்பொருட்கள் கடத்தலின் கேந்திரமாக விளங்குவது வருத்தமளிக்கிறது. காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பட்டாசு வெடிக்கலாம்... ஆனால் சத்தம் வரக் கூடாது.. புகை வரக் கூடாது.. தீபாவளிக்கு புது ரூல்ஸ்!

தீபாவளியன்று பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை மாதக்கணக்கில் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மக்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.90 லட்சத்தில் அமைகிறது ஆராய்ச்சி பூங்கா

கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.90 லட்சத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.