K U M U D A M   N E W S

திமுக

2026இல் திமுக ஒழிந்து விடும்... சீமான் சேற்றை வாரி இறைக்கிறார்! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

கருணாநிதியின் அப்பாவே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

"விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம்" - இபிஎஸ் அறிவுறுத்தல்

தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

"டெல்லியோ, லோக்கலோ யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி" - உதயநிதி

டெல்லியில் இருந்து வந்தாலும், லோக்கலில் இருந்து வந்தாலும் திமுகவிற்கே வெற்றி உறுதி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? - ஆ. ராசா, எம்.பி.

‘பிராமணர்கள் பாதுகாப்பு வலியுறுத்தல்’என்ற போர்வையில் திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என ஆ. ராசா எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மனு - தயாநிதிமாறன் எம்.பி ஆட்சேபம்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்களுக்காக, அவதூறு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைப்பு

உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவா?- எச்.ராஜாவுக்கு அமைச்சர் பதில்

நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால் தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக  பொறுப்பாளராக வைத்துள்ளனர்.

"வீட்டில் தெலுங்கு.. வெளியே தமிழர் என சொல்பவர்கள் திமுகவினர்"- கடுமையாக சாடிய கஸ்தூரி

வீட்டில் தெலுங்கு பேசிக்கொண்டு, வெளியே வந்து நான் தான் தமிழன் என்று சொல்லுபவர்கள் திமுகவினர் என நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டி உள்ளார்.

அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை

சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாட்டாகுடி கிராமத்தை சேர்ந்த குண்டுமணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

"திமுக அரசின் அலட்சியத்தால் 2 போலீசார் பலி" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசின் அலட்சியத்தால் 2 பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நிர்வாகிக்கு நேர்ந்த சோகம்... போரட்டத்தில் குதித்த அதிமுகவினர்.. ஸ்தம்பித்த சாலை

சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொளையாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விஜய் கட்சி தொடங்கியதே இதற்காக தான்.. அரைத்த மாவு வீணாகிவிடும் - முத்தரசன்

விஜய் கட்சி தொடங்கியதே திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே என்றும் அவரது கொள்கை என்பது அரைத்த மாவையே அரைப்பது போன்றது என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

புதிய கட்சி தொடங்கியவர்கள் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள் - விஜய்க்கு முதலமைச்சர் பதில்

வசவாளர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, எங்கள் பணி மக்களுக்கானது. எல்லோருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

“புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம்...” விஜய்யை தாக்கி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என தவெக தலைவர் விஜய்யை தாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.   

#BREAKING: அதிமுக நிர்வாகி துடிதுடிக்க வெட்டி படுகொ** நடுங்கிய சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், நாட்டாக்குடி அருகே அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக்கொலை

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா?- சீமான் சரமாரி கேள்வி

மும்மொழி தெரிந்தால்தான் தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்கிற திமுக அரசின் மறைமுக இந்தி திணிப்பு நடவடிக்கைகள் யாவும், தமிழ் மண்ணில் இன்னொரு மொழிப்போருக்கே வித்திடும் எனவும், அந்தத் தீயில் திராவிடம் செய்யும் துரோகங்கள் யாவும் மொத்தமாய் எரிந்து சாம்பலாகும்

#JUSTIN || திமுக கொடிக்கம்பம் கட்டிய நிர்வாகி பலி | Kumudam News | DMK |

#JUSTIN || திமுக கொடிக்கம்பம் கட்டிய நிர்வாகி பலி | Kumudam News | DMK |

#JUSTIN || திமுக கொடிக்கம்பம் கட்டிய நிர்வாகி பலி | Kumudam News | DMK |

தஞ்சையில் துணை முதலமைச்சர் உதயநிதி வருகைக்காக திமுக கொடி கட்டும் பணியில் இருந்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.

"அதிமுகவை அவர் எப்படி விமர்சிப்பார்.." - உறுதியாகிறதா கூட்டணி..? - இபிஎஸ் கொடுத்த ஹிண்ட

"அதிமுகவை அவர் எப்படி விமர்சிப்பார்.." - உறுதியாகிறதா கூட்டணி..? - இபிஎஸ் கொடுத்த ஹிண்ட

#BREAKING || செந்தில் பாலாஜியின் தம்பி குமரியில் பதுங்கல்? | Kumudam News

அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் கன்னியாகுமரி மேல்கோதையாறில் பதுங்கியிருப்பதாக தகவல்.

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..

புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தபடி தீபாவளி மானிய பொருட்கள் வழங்கக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போட்டித் தேர்வை உடனே நடத்துங்க.. இன்னுமும் ஆசிரியர் நியமனத்தில் தாமதம்... ராமதாஸ் வலியுறுத்தல்!

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? உடனடியாக போட்டித்தேர்வை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

தேவரின் தங்க கவசம் வங்கியில் மீண்டும் ஒப்படைப்பு

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசம் நினைவாலய பொறுப்பாளர் முன்னிலையில் அகற்றப்பட்டு பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணிக்கே லாபம்... - செல்வப்பெருந்தகை அதிரடி

தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

வாயை திறக்காதவர்கள் தற்போது திறந்துள்ளனர்... திமுக என்கின்ற நரகாசுரனை ஒழிக்கணும்... எல்.முருகன்!

திமுக என்கின்ற நரகாசுரனை 2026ல் ஒழித்த பிறகு தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடுவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்துவது எளியவர்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு எழுதப்படும் முடிவுரையாகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.