K U M U D A M   N E W S

கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவம்.. தெப்பத்  திருவிழா கோலாகலம்

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழாவின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

"தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?" - முதலமைச்சர் ஆவேசம்

"மாநிலங்களுக்கு நிதியை தருவதில் மத்தியஅரசுக்கு என்ன பிரச்னை?"

சாகும் வரை நடிக்க வேண்டும் இதுதான் என்னுடைய ஆசை - நடிகர் ராதாரவி

நான் படம் இயக்கி மற்றவர்கள் நடிப்பதை பார்த்தால் கொலை செய்துவிடுவேனோ என்று பயமாய் இருக்கின்றது ஆனால், சாகும் வரை நடிக்க வேண்டும் இதுதான் என்னுடைய ஆசை என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சொல்வதை கேட்க வேண்டிய அவசியம் உள்ளது - திமுக எம்.எல்.ஏ பேச்சு

சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மத்திய அரசு சொல்லக்கூடிய ஒரு சிலவற்றை கேட்க வேண்டிய அவசியம் இருக்கின்றது என ஈரோடு கிழக்குத்தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்பு..!

உசிலம்பட்டி அருகே குழந்தைகள் காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே - கிருஷ்ணசாமி கருத்து

பள்ளிகளில் பாலியல் தொடர்பான விவகாரங்களில் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே என்றும் அதனை நான் வரவேற்கிறேன் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

அரசு முறை பயணமாக மொரீஷியஸ் சென்ற பிரதமர் மோடி.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

இந்தியாவும் மொரீஷியஸூம், இந்தியப் பெருங்கடலால் மட்டுமல்ல, கலாசாரத்திலும் ஒற்றுமையாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகனுக்காக ஓடோடி வந்து பீஸ் கட்டிய தாய் - தெரியாமல் மாணவர் எடுத்த விபரீத முடிவு

இளமாறனின் தாயார் செமஸ்டர் கட்டணத்தை கல்லூரியில் செலுத்தி விட்டு வேலைக்கு சென்று இருந்த நிலையில், செமஸ்டர் கட்டணம் செலுத்தவில்லை என நினைத்து மாணவர் தற்கொலை செய்துள்ளதும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மர்மர்: இந்த வருடத்தின் மோசமான ஸ்கேமா? படத்தை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக் என்றால் அது மர்மர் படம் தான். ஒரு பக்கம் இன்ஸ்டா பிரபலங்கள், சில திரை விமர்சகர்கள் படத்தை ஆஹா., ஒஹோனு புகழ்ந்து தள்ளும் நிலையில் இன்னொருப்புறம் படத்தை பார்த்து விட்டு வரும் பார்வையாளர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-வது ஆண்டு விழா.. மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி..!

சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 56-வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகையில் ஈடுபட்டனர். 

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்கள்...அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.    

கடத்தப்பட்ட ரயிலில் 155 பேர் பத்திரமாக மீட்பு.. ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழப்பு

கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட ரயிலில் சிக்கி கொண்ட 400 பயணிகளில் 155 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணித்த ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 27 பேர் பலியாகினர். தொடர்ந்து ரயில் உள்ள எஞ்சியோரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதய அறுவை சிகிச்சையில் சாதனை - இம்பெல்லா பம்ப் பொருத்தம்

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இதயவியல் துறை மருத்துவர்கள் இதயத்தில் இருந்து ரத்தத்தை பம்ப் செய்து உடலின் பிற உறுப்புகளுக்கு அனுப்புவதற்கு தற்காலிகமாக இம்பெல்லா என்ற பொறியியல் சார்ந்த இதய பம்பை பயன்படுத்தி 80 வயது முதியவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளனர்.

‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை

இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Auto strike: சென்னையில் ஒருநாள் ஆட்டோ ஸ்டிரைக்.. இதுதான் காரணமா?

இரு சக்கர வாகன பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவிற்கு விலக்கு அளிக்க வேண்டும், 12 வருடமாக உயர்த்தாத மீட்டர் கட்டணத்தை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

ஒரு குப்பை தொட்டி கூட இல்லையா..? அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கன்னியாகுமரியில் குப்பைகளை சேகரிக்க ஒரு குப்பை தொட்டி கூட அமைக்காத புகாரில், அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

துரைமுருகன் மீது இன்றும் அந்த குற்றச்சாட்டு உள்ளது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒப்புதலே கொடுக்கவில்லை என பச்சை பொய் பேசுகிறார்கள் என சாடினார்.

வைகை நதி மாசு -"மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது" - நீதிபதி

வைகை நதி மாசுபடுவதை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

அகஸ்தியர் அருவியில் குளிக்கத் தடை

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி.. மடக்கிப்பிடித்த போலீசார்

ஆந்திர மாவட்டம் சித்தூர் அருகே ஜவுளிக் கடை உரிமையாளர் வீட்டில் 4 கொள்ளை முயற்சி

தேனி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை எப்படி?

திண்டுக்கல் மற்றும் தேனி உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

ஆதரவுக்கோரி ஆந்திரா சென்ற தமிழ்நாடு அமைச்சர்..

தொகுதி மறுவரையறை தொடர்பாக வரும் 22ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

மார்ச் 18ல் அனைத்துக்கட்சி கூட்டம் – அழைப்பு விடுத்த தேர்தல் அதிகாரி

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் கர்நாடக முதலமைச்சருடன் தமிழ்நாடு குழு சந்திப்பு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் தமிழ்நாடு குழு சந்திப்பு

ஓட்டு கட்டடத்தில் கல்வி பயிலும் அவலம்... போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கட்டட வசதி கோரி பள்ளி. மாணவர்கள் போராட்டம்