K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

Union Budget 2024: பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் என்ன?.. லிஸ்ட் போட்ட ஸ்டாலின்!

''மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என நம்புகிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீலகிரியை போட்டுத் தாக்கும் கனமழை.. மக்களே உஷார்.. இதை செய்யாதீங்க.. மாவட்ட ஆட்சியர் வார்னிங்!

''நீலகிரியில் கனமழை பெய்வதால் நீரோடைகளின் அருகே செல்ல வேண்டாம், ஆறுகளில் குளிக்க வேண்டாம், குழந்தைகள் ஆற்று வெள்ளத்தில் விளையாட அனுமதிக்க கூடாது'' என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காலையிலேயே ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் 7 நாள் கொட்டப்போகும் மழை..சென்னையில் எப்படி?

இன்று முதல் ஜூலை 24 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

போதிய பேருந்துகள் இல்லை.. கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை சிறைபிடித்த மக்கள்.. பரபரப்பு!

வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது.. தட்டித் தூக்கிய போலீஸ்.. பரபரப்பு தகவல்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிதரன், கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். அருளின் நெருங்கிய நண்பரான இவர் அருளின் செல்போனை மறைத்து வைத்து உடந்தையாக இருந்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி.. பா.ரஞ்சித் முதல் அட்டகத்தி தினேஷ் வரை.. பங்கேற்றவர்கள் யார்? யார்?

Armstrong Memorial Rally : நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் புகைப்படம் அடங்கிய பேனர்களை கைகளில் வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் மீதான தாக்குதல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மலையை காத்த காவலன்.. 'மக்கள் போராளி' அரிட்டாபட்டி ரவிச்சந்திரன் காலமானார்.. யார் இவர்?

Madurai Arittapatti Ravichandran Passed Away : சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளின் சிறந்து விளங்கிய அரிட்டாபட்டி ரவிச்சந்திரன், அந்த கலைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். இது மட்டுமின்றி நாட்டு மீன்களின் வகைகள், மீனவ மக்களின் மரபார்ந்த மீன்பிடித் தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆர்வமுடன் ஆய்வு செய்துள்ளார்.

வேலை கிடைக்காத பட்டதாரிகளே.. கரும்பு ஜூஸ் பிழிய ஆட்கள் தேவை.. ரூ.18,000 சம்பளம்.. என்ன ரெடியா?

Sugarscane Juice Wanted Advertisement: இந்த விளம்பர பதாகையை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வரும் நெட்டின்சன்கள், ''என்னங்க சொல்றீங்க.. கரும்பு ஜூஸ் பிழிய ரூ.18,000 சம்பளம் கொடுக்குறாங்களா?'' என்று கூறி வருகின்றனர்.

Microsoft: 20 மணி மைக்ரோசாஃப்ட் போராட்டத்துக்கு முடிவு... சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிலை!

Chennai Airport : மைக்ரோசாஃப்ட் மென்பொருள் சேவை முடங்கியதால் தமிழ்நாடு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் விமான சேவையில் பெரும் குழப்பம் நீடித்தது. தற்போது மைக்ரோசாஃப்ட் பிரச்சினை முடிவுக்கு வந்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீண்டும் இயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rain Update: சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு எப்படி..? நீலகிரி, கோவையன்ஸ் உஷார்!

Tamil Nadu Weather Update Today : தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.