K U M U D A M   N E W S

தமிழ்நாடு

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் - செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடக்கம் - மேயர் பிரியா 

சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

தச்சங்குறிச்சியில் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.. தொடங்கி வைத்தார் சட்டத்துறை அமைச்சர்..!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

யானைகளை புதிய மறுவாழ்வு மையத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை - தமிழக அரசு

திருச்சி எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளை புதிதாக அமைக்கப்படும் சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரத்தான் போட்டி: தென் சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெறுவதையொட்டி முக்கிய சாலைகளில் ஜனவரி 5-ம் தேதி அதிகாலை முதல் காலை 8 மணி வ்ரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. இதுதான் காரணம்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கு கடத்த இருந்த கள்ளத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்.. இருவர் கைது

சென்னையில் இருந்து இலங்கைக்கு கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் கடத்திய இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம்.. ரூ.1000 வழங்காததால் மக்கள் குமுறல்

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்காதது வருத்தமளிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரையில் தடையை மீறி பேரணி.. குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது

மதுரையில் பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜக-வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.