K U M U D A M   N E W S

தமிழ்நாடு

செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்.. தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை விசாரிக்க தடை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை தவிர்த்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. ஞானசேகரன் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

ஏழு நாட்கள் போலீஸ் காவலில் இருந்த குற்றவாளி ஞானசேகரன் சைதாப்பேட்டை  9-வது நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

போதைப்பொருள் வழக்கு.. ஐந்து பேர் அதிரடி கைது.. உபகரணங்கள் பறிமுதல்

சென்னை வளசரவாக்கம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், நான்கு போதை மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு.. வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்..? நீதிபதி கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணையில் வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்  என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிர்மலா சீதாராமனை சந்தித்த தங்கம் தென்னரசு.. நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி மனு

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ஆயிரத்து 56 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மனு அளித்தார்.

பாழடைந்த கட்டடத்தில் சிக்கிய மாணவிகள்... இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

சென்னையில் மூன்று பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றதாக மூன்று இளைஞர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கொண்டு வரப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்  பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து  பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்பதற்கு நாங்கள் தான் காரணம் - முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

அதிமுக ஆட்சியில் சீனா  பட்டாசுகள் இறக்குமதியாவது தடுத்து நிறுத்தப்பட்டதால் தான், இன்றைய தினம் பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்கிறது என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்..! 

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டப் புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.

வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.