K U M U D A M   N E W S

தமிழ்நாடு

சென்னை ஈசிஆர் சம்பவம்... பெண்களை துரத்திய கும்பல்... முக்கிய குற்றவாளி கைது...

சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, இளைஞர்கள் சிலர் துரத்தி சென்று அச்சுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆவடி அருகே கால்பந்து கோல் போஸ்ட் விழுந்து சிறுவன் பலி

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது எதிர்பாராத விதமாக இரும்பு கோல் போஸ்ட் தலை மீது விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நித்தியானந்தா-பிரேமானந்தா என்றாலே பிரச்சனைதான்.. உயர் நீதிமன்றம் கருத்து

நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவர்கள் என்றாலே பிரச்னையாக இருக்கிறது என்று தெரிவித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் நித்தியானந்தா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா- நிர்மல் குமார்.. விஜயின் திட்டம் என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தனர்.

பெரியார் விவகாரம்: சீமான் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார்- ஜெயக்குமார் எச்சரிக்கை

பெரியார் குறித்து பேசுவதை சீமான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும்- உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழக உள்துறை அமைச்சர் தீரஜ் குமார் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அம்பேத்கரை அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்து போராட்டம்- செல்வப்பெருந்தகை

நாடாளுமன்றத்தில் அமித்ஷா, அம்பேத்கரை இழிவுப்படுத்தி பேசிய நிலையில் விமானநிலையத்தில் கருப்புக்கொடி காட்ட அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜுனாவிற்கு முக்கிய பொறுப்பு..? விஜய் போடும் மாஸ்டர் பிளான்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பிப்ரவரி 2-ஆம் தேதி ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனை.. 15 நாட்கள் நடைபெறவுள்ளதாக மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் தொழுநோய் பாதிப்பு அதிகம் உள்ள 133 வட்டாரங்கள் 27 நகர்பகுதிகளில் உள்ள 50 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் உள்ள 2 கோடி பேருக்கு வரும் 13-ஆம் தேதி முதல் முதல் 28-ஆம் தேதி வரை 15 நாட்கள் வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அதிர வைத்த ஈசிஆர் சம்பவம்.. தாம்பரத்தில் கார்கள் பறிமுதல்

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை துரத்தி சென்ற திமுக கொடி பொருந்திய இரண்டு கார்களை தாம்பரத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.