K U M U D A M   N E W S

தமிழ்நாடு

Thaipusam 2025 : தைப்பூசத் திருவிழா: தமிழ் நிலக் கடவுள் முருகன்.. விஜய் பதிவு

TVK Vijay Wishes Thaipusam 2025 : தைப்பூசத் திருவிழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin Birthday : உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

Deputy CM Udhayanidhi Stalin Birthday : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு ஏறு தளுவுதல் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான வீரர்களும், காளைகளும் பங்கேற்றனர்.

ஓசி டிக்கெட் என்று கூறி பெண்களிடம் இளைஞர்கள் வாக்குவாதம்.. விளக்கமளித்த போக்குவரத்து கழகம்

சென்னை மாநகர பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணித்த பெண்களிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது. 

விவசாயிகள் மேல்முறையீட்டு மனு.. வெளியேற்ற தடை விதித்த உச்சநீதிமன்றம்..!

கடலூர் மாவட்டம், மலையடி குப்பம் விவசாயிகளின் மேல்முறையீட்டு மனு மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும் வரை அவர்களை வெளியேற்ற தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை மண்ணில் முதல் பெரியார் சிலை - இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேச்சு

இலங்கைக்கு பயணம் சென்றிருக்கும் சேலம் மாவட்டத்தை இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஆலோசனை கூட்டத்தில் பேசியது பரப்பானது. 

ஆபாச வீடியோ காட்டி மிரட்டல் இளம்பெண்களிடம் பணம் சுருட்டல் ஆதாரங்களுடன் சிக்கிய பாஜக பிரமுகர்!

இளம்பெண்களுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி, லட்சக்கணக்கில் பணம், நகை சுருட்டியதாக பாஜக பிரமுகரை, போலீஸார் தட்டித் தூக்கியுள்ளனர். யார் அந்த பாஜக பிரமுகர்? நடந்தது என்ன? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

பச்சைக்கிளிகள் தோளோடு.. 3 தலைமுறை ஒன்றுகூடிய நிகழ்ச்சி மதுரையை கலக்கிய குடும்பம்!

Usilampatti Family Function : உசிலம்பட்டியில் தமிழ்நாட்டின் பல பகுதியில் தனித் தனியாக பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவே பிரத்யேகமாக ஒரு விழாவை கொண்டாடியுள்ளது ஒரு குடும்பம். மூன்று தலைமுறையினர் இணையும் விழா என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில் சுமார் 240 குடும்பங்கள் ஒன்றிணைந்து அன்பை பரிமாறிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் கஞ்சா விற்பனை.. வசமாக சிக்கிய பெண் வியாபாரி..  மூன்று பேர் கைது

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி கொள்ளையடித்த விவகாரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

திருப்பத்தூர் அருகே  இரவு வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி 15 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வனப்பகுதிக்குள் விடியவிடிய பிரார்த்தனை... ஆண்கள் மட்டும் பங்கேற்கும் குலதெய்வ வழிபாடு..!

ராஜபாளையம் அருகே கிராமத்து ஆண்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விடியவிடிய வழிபாடு நடத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று திருவிழாவை கொண்டாடினர்.