K U M U D A M   N E W S

தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகன் தொடர்பான சொத்துகுவிப்பு வழக்கு.. 6 மாதத்திற்கு விசாரணையை முடிக்க உத்தரவு!

வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலி மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதகளில் துப்பாக்கி ஏந்திய பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

என்.எல்.சிக்கு எதிராக போராட்டம்...அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு ரத்து

என்.எல்.சி.-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் அதிகாரிகளை கேடயமாக பயன்படுத்திய தமிழக அரசு.. நீதிபதிகள் அதிருப்தி

டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தடுக்க தமிழக அரசு முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வேங்கை வயல் விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரி மனு ஒத்திவைப்பு!

வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தங்களுடைய வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனு வரும் மே மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நட்பாக பழகி சொகுசு கார்களுடன் தலைமறைவான யூடியூபர்.. ஷாக்கான தொழிலதிபர்!

கோவையில் சொகுசு காருடன் தலைமறைவான யூடியூபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னையில் அதிர்ச்சி.. வடமாநிலத்தவரை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவரை ஊன்றுகோலால் அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Gold rate: மக்களுக்கு சற்று ஆறுதல் தந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.2,200 குறைவு!

தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து கொண்டே சென்ற நிலையில் இன்று விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

ஆனைமலை திட்டத்திற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை- அமைச்சர் துரைமுருகன்

ஆனைமலை பாண்டியாறு திட்டம் குறித்து விரைவில் கேரளா அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர்கள் பணி.. தேர்வு பட்டியல் ரத்து.. நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்கான திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய தேர்வுப் பட்டியலை மூன்று மாதங்களில் வெளியிட வேண்டும் எனவும் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.